ன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, பேராசிரியர்களே..

கடந்த 10-04-2019 அன்றைய தேதியில் இருந்து இரவு, பகல் என மாணவ, மாணவிகள் நான்கு நாட்களாக அண்ணாமலை பல்கலைக்கழக விடுதிகளில் திடீரென ரூ.24,000 -ஆக உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

அதில் துணை வேந்தர் முருகேசன் அவர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக ஒத்துக்கொண்டார். இந்த உத்தரவை எழுத்து மூலமாக அனைத்து விடுதி தகவல் பலகையில் ஒட்டவேண்டும் என்று மாணவர்கள் கோரினார்கள்.

படிக்க:
விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

இதையெல்லாம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட துணை வேந்தரும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் முன்னைவிட இரண்டு மடங்காக (ரூ.48000) -ஆக கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது பல்கலைக்கழக தேர்வு நெருங்கி வரும் நேரத்தில், பணம் கட்டச் சொல்லி மிரட்டுகிறது. உயர்த்தப்பட்ட இக்கட்டணத்தை கட்டத்தவறும் மாணவர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கட் வழங்க முடியாது என்று பல்கலை நிர்வாகம் மாணவர்களை மிரட்டி வருகிறது. இதற்கு அடிபணியாத மாணவிகளோ மீண்டும் கடந்த 27-ம் தேதி அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட போராட்டத்தைப் போலவே, தற்பொழுதும் இரவிலும் தாமரை விடுதி மாணவிகள் தங்கள் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம். மாணவர்களின் எதிர்காலத்தை பணயமாக வைத்து பல்கலை நிர்வாகம் ஆடும் இந்த மோசமான ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.


பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் அவர்களின் கண்டனம் :

போராட்டத்தில் விடுதி மாணவிகள் (முகநூல் வீடியோக்கள்) :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க