யர்நீதிமன்ற வரலாறும் (சென்னை) நீதித்துறைச் சார்ந்த அரிய சுவையான தகவல்களும் நிரம்பிய நூல். “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்.(1987)’’

நண்பர்களே…

இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளின் வார்த்தைகளை பெரும்பாலோர் நம்புவதில்லை. அதேநேரத்தில் தங்களின் பிரச்சனைகளை நீதிமன்றங்கள் நியாயத்துடன் தீர்த்து வைக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நால்வருண நீதி என்று சொல்லப்படுவதற்கு மாறாக எல்லா மக்களுக்குமான பொதுவான நீதியை வழங்கும் என்று நம்பப்பட்ட நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளில் நீதியும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

ஆனால் 19-ம் நூற்றாண்டில் வழக்குகள் சார்ந்த விவரங்கள் தமிழ்மொழியில் இருந்ததைப் போன்று பின் வந்த காலங்களில் அதாவது சுதந்திரத்திற்கு பின்னான காலங்களில் நமக்கு கிடைப்பது அரிதாகிவிட்டது.

இத்தகைய சூழலில் “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” என்ற நூலை (1987) – நீதிபதி சி.இராமகிருட்டினன் பி.எ.பி.எல்., அவர்களால், அரிய செய்திகளுடன் மிகச் சுவையாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை – ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அந்த நூலின் இணைப்பை தங்களுக்கு கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க