“இன்றுவரை அச்சில் வராத” தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை முழுமைக்குமான மிகச் சிறந்த விளக்கம். (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

ண்பர்களே….

பொ.வேல்சாமி
தொல்காப்பிய இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரைகளுள் மிகப் பழமையானதும் தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டதுமான அரிய உரை என்பது இளம்பூரணர் எழுதியது. இந்த உரை நூல் 1868-ல் முதல்முதலாக அச்சாகியது. பின்னர் 1928-ல் தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்நூலை அச்சிட்டார். 1969-ல் பேராசிரியர், அடிகளாசிரியர் சிறப்பான ஆய்வுப்பதிப்பை வெளியிட்டுள்ளார். 1969-ல் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி மாணவர்களுக்கு பயன்படும்படியான ஒரு பதிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது பேராசிரியர், கோபாலைய்யர், பேராசிரியர் கங்காதரன் அவர்களால் மிகச் சிறப்பாக ஆராயப்பட்ட ”தொல்காப்பிய எழுத்ததிகார உரைக்கொத்து“ நமக்கு கிடைக்கிறது.

இந்தப் பதிப்புகளுக்கிடையே தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ் இலக்கணக் கல்வி மரபு சாரந்த பல செய்திகளுக்கான விளக்கங்களும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்கினியர் எழுதிய உரையை ஒப்பிட்டும் நவீன மொழியில் கருத்துக்களை மேற்கோள் காட்டியும் சுவையாக எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய அறிஞர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. நான் ஆராய்ந்துப் பார்த்ததில் இந்த விளக்கத்தை எழுதியிருப்பவர் பெரும் இலக்கணப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியாராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் 1944-ல் ரெட்டியார் எழுதிய எழுத்ததிகார ஆய்வு என்ற நூலில் உள்ள கருத்துக்களும் குற்றியலுகரம் பற்றிய கருத்துக்களும் ரெட்டியார்தான் இந்த விளக்கத்தை எழுதியிருப்பார் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த கையெழுத்துப் பிரதியில் ரெட்டியார் பலமுறை குறிப்பிடப்படுவதும் இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

குறிப்பு : 162, 214 பக்கங்கள் உள்ள இரண்டு தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணம் விளக்க உரை கையெழுத்துப் பிரதிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க