கல்லில் உறைந்த செங்குருதியா ? செந்நிறத்தில் மின்னும் கண்ணாடியா?

நிலத்தின் அடி ஆழத்தில் உயிரைப் பணயம் வைத்து நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கக் கல்லை ஆயிரக்கணக்கான மனிதர்கள் தேடுகிறார்கள்.

தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் இது எடுக்கப்படுகிறது. குரோமியத்தின் மகிமையால் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் என மாணிக்க கற்கள் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றன.

அறிவியலை பொருத்தமட்டில் மாணிக்க கல் வெறும் கனிமம் மட்டுமே. இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.

மோகாக்கிலிலுள்ள ஒரு மாணிக்க கல் சுரங்கத்திற்கு வந்திருக்கும் தொழிலாளிகளின் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மாணிக்க கல் சுரங்கமொன்றில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.
சுரங்கமொன்றில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் சலித்துப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்
மோகோக் நகர சுரங்க குகையொன்றின் உள்ளே தொழிலாளி ஒருவர் இறங்குகிறார்.
மோகோக் நகர சுரங்க குகையில் பணியின் இடையே தொழிலாளி ஒருவர் ஓய்வெடுக்கிறார்.
தாம் தேடிவந்த கனிமத்தின் படிமம்தானா என பரிசோதிக்கும் தொழிலாளி.
மாணிக்க கல் சுரங்கமொன்றில், மாணிக்க கற்களை சுரங்கத் தொழிலாளி ஒருவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
மாணிக்க கல் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.
உணவு இடைவேளையில் உணவருந்தும் தொழிலாளிகள்.
வடக்கு மாண்டலேவின் மோகாக்கிலிலுள்ள ஒரு சுரங்கத்தில் ஓய்வு நேரத்தில் புகைபிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தொழிலாளி
மோகாக் நகர், நவரத்தின கற்கள் சந்தையில் வாங்குபவர்களுடன் விற்பனையில் வணிகர்கள்.
மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.
மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.
மோகாக் நகர் சந்தையில் ஒரு மாணிக்க கல்லை ஆய்வு செய்கிறார் ஒரு வாடிக்கையாளர்.
மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.
மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.


– சுகுமார்
நன்றி : த கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க