கல்லில் உறைந்த செங்குருதியா ? செந்நிறத்தில் மின்னும் கண்ணாடியா?
நிலத்தின் அடி ஆழத்தில் உயிரைப் பணயம் வைத்து நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கக் கல்லை ஆயிரக்கணக்கான மனிதர்கள் தேடுகிறார்கள்.
தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் இது எடுக்கப்படுகிறது. குரோமியத்தின் மகிமையால் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் என மாணிக்க கற்கள் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றன.
அறிவியலை பொருத்தமட்டில் மாணிக்க கல் வெறும் கனிமம் மட்டுமே. இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.
















– சுகுமார்
நன்றி : த கார்டியன்