ருடாந்திர பருவமழை காரணமாக, மும்பையின் பெரும்பாலான பகுதி இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற கட்டுமானப் பணிகள், குப்பைகளால் அடைப்புக்குள்ளான நீர் வழிகள் – வடிகால்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

கடும் பருவமழை காரணமாக மும்பையில் சுவர் இடிந்து மட்டும் 27 பேர் கொல்லப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடும் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது.

கடுமையான பருவமழை காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்லும் மக்கள்.

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான மலாட்-இல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த குடிசைப் பகுதி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

கல்யாண் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் கனமழை காரணமாக குடிசைகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 18 பேரைக் கொன்றது.

மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஜூலை 1, 2-ம் தேதிகளில் மட்டும் மும்பையின் சில பகுதிகளில் 300மி.மீ.-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாக பயணிக்கும் சில புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

படிக்க:
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
♦ வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை

இடைவிடாத கனமழை காரணமாகவும், மேலும் கனமழை பொழிவு இருக்கும் என்ற வானிலை முன் அறிவிப்பின் காரணமாகவும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சுவர் இடிந்துவிழுந்ததில் தனது குடும்பத்தை இழந்த பெண் கதறுகிறார்.

மீட்புப் பணி இன்னும் முடியவில்லை. இதுவரை 2 டசனுக்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார் ஒரு தீயணைப்பு வீரர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், இந்தியாவில் பலமில்லாத அடித்தள கட்டுமானத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக நிகழும் ஒன்றாகிவிட்டது.

ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் மும்பையின் சில இடங்களில் 300மி.மீ.க்கும் அதிகமான மழையளவு பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் நகரத்தின் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவித்தனர்.


தமிழாக்கம் : அனிதா
நன்றி : அல் ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க