இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை கடந்த மே மாதம் 13-ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், அத்தடையை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு – 2024-ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது, மைய உள்துறை அமைச்சகம்.
இந்த உத்தரவு, மே 14, 2019 அன்று பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்வரைகூடக் காத்திராமல், காபந்து அரசான மோடி அரசே இந்த உத்தரவை வெளியிட்டிருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தனது தீராத வன்மத்தையும் வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது.
2009-ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிக் கட்டப் போரின்போதே விடுதலைப் புலிகள் இருந்த தடம்கூடத் தெரியாத அளவிற்கு அவர்களை இந்திய அரசின் உதவியோடு கொன்றொழித்தது, இலங்கை அரசு. கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்திலோ, தமிழகத்திலோ மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.
ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது போலக் கூறி, “அதனின் குந்தகச் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன” என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, அவ்வியக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது, இந்திய அரசு. “கற்பனையான எதிரிகளை உருவாக்கிப் பீதியூட்டுவதன் மூலம்தான் பாசிஸ்டுகள் தமது அடக்குமுறைகளை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்” என்பதை இத்தடையின் மூலம் மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்கள், இந்து மதவெறி பாசிஸ்டுகள்.
இத்தடை நீட்டிப்பின் மூலம் தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்காகச் சட்டபூர்வமாகப் போராடும் இயக்கங்களைக்கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்கான முகாந்திரத்தையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது, இந்திய அரசு.
– புதிய ஜனநாயகம், ஜூன் 2019
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |