நெருக்கடி காலகட்டத்தை விட மிகவும் மோசமான சூழலே தமிழகத்தில் நிலவுகிறது ! ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, அணுக் கழிவு கூடம் என தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவருகிறது அரசு. இதனை எதிர்த்து தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை எந்த வகையில் பதிவு செய்தாலும், அவர்கள் மீது கருப்புச்சட்டங்களைப் பாய்ச்சி ஒடுக்குமுறையை செலுத்துகிறது போலீசு. போராடுபவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு குவிக்கிறது அரசு.
நமது உரிமைகளை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிக்க, நாளை காலை தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! அனைவரும் வருக ! நாளை (17-07-2019) காலை 11 மணிக்கு …