டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிலையை சாதி வெறியர்கள் உடைத்ததைக் கண்டித்து, இன்று (26.08.2019) காலையில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதிவெறியர்களைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், இனி இதுபோன்ற செயல்கள் நடக்காமல் போலீசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்கள் முழக்கம் எழுப்பி கோரிக்கை விடுத்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம் : தொடர்புக்கு 9788808110.