சென்னை பல்கலைகழகத்திலிருந்து தன்னை சட்டவிரோதமாக நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் வழக்கு !
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பெளத்தம் படித்துக் கொண்டிருந்த மாணவர் கிருபா மோகன் கல்லூரியிலிருந்து 06.09.2019 தேதியிட்டு Not approved gor his provisional admission என்று தெரிவிக்கப்பட்டு திடீரென நீக்கப்பட்டார்.
மாணவர் கிருபா மோகன் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படித்து முடித்தவர் என்பதும், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டு வந்தவர்.

இவ்வாறுசட்டவிரோதமான முறையில் தனக்கு கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்தும்
மாணவர் கிருபாமோகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக்கிளை வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, மீனாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று ( 17.09.2019) இவ்வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அவர்கள் மாணவருக்காக ஆஜராகி வாதாடினார். அவருடன் வழக்கறிஞர்கள் சு.ஜிம் ராஜ் மில்ட்டன், ச.பார்த்தசாரதி ஆகியோர் ஆஜரானார்கள்.
படிக்க:
♦ ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
♦ ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
சென்னைப் பலகலையின் உத்தரவில் :
1. ஏற்கனவே முதுநிலை படித்தவராக இருந்தால், அவர் எந்த பாடத்திலும் தோல்வியடைந்திருக்க கூடாது.
2. கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியிருக்க கூடாது.
3. ஏற்கனவே படித்திருந்த துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும்.
என தெரிவிக்கப்பட்டு, இந்த மூன்று விதிகளில் எந்த விதியை மீறியிருக்கிறார் என கல்லூரியின் நீக்க உத்தரவில் கூறப்படவில்லை. என்றும்
இவ்வாறு எவ்வித காரணமும் தெரிவிக்காமல் மாணவருக்கு கல்வி மறுத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, உள்நோக்கமுடையது. மேற்படி உத்தரவிலேயே மேலதிகாரிகளின் உத்தரவுப்படி என்று தெரிவிப்பதன் மூலமே இது மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட உத்தரவு என்றும், வாதிட்டார்.
இவ்வழக்கில் சென்னை பல்கலைக்கழகம் தனது விளக்கத்தை தாக்கல் செய்ய 24.09.2019க்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் அன்று இவ்வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
– வினவு செய்தியாளர்