5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் !

”கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளி படிப்பில் இருந்து விரட்டவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !. இந்த அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும்.” என்ற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று மாலை 5:30 மணியளவில் கரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் குணசேகரன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவா, வழக்கறிஞர் தோழர் முருகேசன் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தோழர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

படிக்க:
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் காவிரி நாடன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர் தாமரைக்கண்ணன் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சமயத்தில் மழை பெய்தபோதும் வந்திருந்த பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 96298 86351.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க