நடுத்தர மக்கள்கிட்ட ஏதுங்க பணம்? தங்கம் எல்லாம் வாங்க முடியாது.
லிட்டருக்கு 13 ரூபாய் தனியார் பால் விலையை ஏத்தியிருக்கான். ஆவின் பால் 8 ரூபாய் ஏத்தியிருக்காங்க. யாரு சம்பாரிக்கிறாங்க? அரசியல்வாதிங்களா? மக்களா? மோடியையும் ஓ.பி.எஸ். எடப்பாடிய பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.
தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா?
எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்து, இங்க விலைவாசிய குறைக்கப்போறாரா? இன்னய நிலைமையில பத்து ரூபா செலவு பண்ணவே யோசிக்க வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் வரி. ஜி.எஸ்.டி. வரி இல்லாத பொருளு ஒன்னு வாங்கிட முடியுமா?
எங்களால சேர்க்க முடியல… இருக்க இருக்க அழிச்சிகிட்டு இருக்கோம்.
மளிகைகடைக்காரரின் குமுறல்!
பாருங்கள்! பகிருங்கள்!!

படிக்க:
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
♦ மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்