ருவநிலைக்கானப் போராட்டம்  இந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல வணிக உலகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் முன் எப்போதும் நிகழாதது இந்நிகழ்வு.

மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் உலகெங்கிலும் 2,600 -க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டம் பள்ளி மாணவர்களால் முன்னின்று நடத்தப்படுவது இந்தப் போராட்டத்தின் சிறப்பம்சமாகும். பதினாறு வயதே நிரம்பிய பெண்ணான சுவீடனின் கிரேட்டா துன்பெர்க் இந்த இயக்கத்தின் அடையாளக் குரலாக வெளிப்படுகிறார்.

Climate changeபருவநிலை விஞ்ஞானிகளால் 2017-ல் எழுதப்பட்ட “மனித குலத்திற்கு எச்சரிக்கை” என்பதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மனிதன் தன்னுடைய செயல்கள் மூலம் எவ்வாறு பேரழிவு விளைவுகளை இக்கிரகத்திற்கு ஏற்படுத்துகிறான் என்பதை இந்த விஞ்ஞானிகள் இதில் சுருக்கமாகத் தெரிவித்து இருந்தனர். உலகத்தில் நிலவும் வெப்பநிலையில் ஏற்கனவே மனிதர்கள் ஒருசெண்டிகிரேட் அளவு வெப்பமயமாதலைத் தூண்டியுள்ளனர். கூடிய விரைவில் இது 2 செண்டிகிரேட் என்ற அளவிற்கு மேலே நிகழும்  இத்தகைய வெப்பநிலை அதிகரிப்பானது பனிப்பாறை உருகுவதற்கும், கடல் மட்டம் அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்று, இந்த கிரகத்தின் வெப்பமயமாதலில் ஒரு சுய சுழற்சிக்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையே அச்சுறுத்துகின்றன.

புவி வெப்பமயமாதல், அறிவியியலின் படி மறுக்க முடியாத நிகழ்வு. அது உண்டாக்கும் பேரழிவுகளை தடுப்பதற்காக தான் ஒப்புக் கொண்ட நடவடிக்கைகளை பேரளவுக்கு கூட இந்த உலகச் சமூகம் செயல்படுத்துவதில்லை. சுதந்திர நாடுகளின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் என்பது ஒரு அறிவியியல் நிகழ்வு என்பதை அங்கீகரிக்கப்பதில் தவறிவிட்டார். மேலும் புதைபடிவ எரிபொருட்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

அதிகளவு கீரின்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதை தடுப்பதற்காக, உலகின் புகைப்போக்கி என்றழைக்கப்படும் சீனா, தற்போது மூன்றாம் உலக நாடுகளில் நிலக்கரித் திட்டங்களுக்காக (மான்ஸ்ட்ரோ சிட்டி என்றழைக்கப்படும் சகிவால் மின் உற்பத்தி நிலையம்) தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

படிக்க:
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

உலக முதலாளித்துவத்துவத்தால் எரியூட்டப்படும் அமைப்பைத் தோலுரிக்காமல், பருவநிலை மாற்றம் பற்றி இனி விவாதிக்க முடியாது. உற்பத்தி பொருட்களை சரக்குகளாக மாற்றமடையச் செய்து, வளங்களை பணத்தின் அடிப்படையில் அளக்கும் போக்கே, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களைக் காட்டிலும் அச்சமூகத்தின் தனிச் சிறப்பாகும் இதன் நோக்கம் பொருட்களை உருவாக்குவதும், நீண்ட கால நீடித்த தன்மையோ இல்லை, சரக்குகளின் சுற்றோட்டத்தின் மூலமே, தனியார் இலாபங்களை உருவாக்குதலே ஆகும். முதலாளித்துவத்தின் தனித்தன்மையை அறிய வேண்டுமானால் அதன் வருகையான பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் உலகின் பொருள்சார் செல்வத்தின் பெரும்பகுதி தற்கால மற்றும் வருங்கால தலைமுறைகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்று இருந்தது.

climate_change_1முதலாளித்துவத்தின் வருகை என்பது மனித இயல்பில் பொறிக்கப்பட்ட ஒரு பரிணாம ரீதியான பாதை என்பதை விட, மனித வரலாற்றின் நீண்டகாலப் போக்கை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வாகும். முதலாளித்துவத்தின் எழுச்சிக்குப் பின் ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளையடிக்கும் வரலாற்றை விவரிக்கும் மார்க்ஸ், எப்படி சமுதாய சொத்துரிமை மீதான தாக்குதல், சரக்கு உற்பத்தியின் அடிப்படையிலான ஒரு சமுதாயம் உருவாவதற்கு மையமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறார். இது மனித இயல்பு அல்ல. உலக முதலாளித்துவத்திற்கான நிலைமைகளை அமைத்த மில்லியன் கணக்கான மக்களை, பட்டினிக்கும், இடப்பெயர்வுக்கும், வாழ வழியின்மைக்கும் ஆளாக்கியது.

முதலாளித்துவம் அதன் சுற்றுப்புறத்துடன் சமநிலையில் இருக்க முடியாத ஒரு விரிவாக்க அமைப்பு. முதலாளித்துவம் அது தன் இலாபத்தின் நிரந்தரத் தேடலுக்காக இயற்கை வளங்களை பிரித்தெடுப்பதற்க்கும், தன்னுடைய சரக்குகளை விற்பதற்கும்  புதிய சந்தைகளை அவசியமாக்குகிறது. பருவநிலை அரசியல் நிபுணரான ஜான் பெல்லாமி பாஸ்டர் இந்தப் போக்கை உற்பத்தியின் டிரெட்மில் என்றழைத்தார். இதில் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக டிரெட்மில் வேகமாக இயங்கினாலும் அதில் வேகமாக ஒட வேண்டும்.

சமூக மற்றும் சூழலியல் விளைவுகள் எதிர்மறையாக நிகழ்ந்தாலும், தன்னுடைய சரக்குகளுக்காக மேலும் மேலும் இயற்கை வளங்களை உற்பத்தி துறை மூலம் விழுங்குகிறது. நுகர்வு சாதனம் இல்லாமல் மனிதர்களை முழுமையற்றவர்களாக உணரச் செய்கிறது. அநேகமாக மனிதர்கள் நுகர்வு சாதனம் இல்லாமல் தேவையில்லை என்று கூறுவதற்கு 1.2 டிரில்லியின் டாலர் அளவில் விளம்பரத் தொழிற்துறை இயக்கப்படுகிறது. இந்த தீய சுழற்சி நமது சுற்றுப்புறத்தை மட்டும் விழுங்குவதோடு மட்டுமில்லாமல், பண்டங்களின் மூலம் ஒரு தனிநபரின் சமூக மதிப்பை அடையாளப்படுத்தி, மனிதர்களின் சமூக உறவுகளையும்  கூட புறநிலைப்படுத்துகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவம் தன் காலனிய வன்முறைகளின் மூலம் தன் தடையற்ற சந்தைக்கு, அந்நாடுகளின் இயற்கை வளங்களை திறக்கச் செய்ததன் மூலம் அந்நாடுகளின் வரலாற்றுப் பாதையை உடைத்தது. மிகையான கடன்கள் ஏழை நாடுகளை முதலாளித்துவத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. தன்னுடைய மிகச்சிறந்த படைப்பான “பூமராங் கடன்” என்ற ஆய்வில் சூசன் ஜார்ஜ் 1980-களில் இருந்து எவ்வாறு ஏழை நாடுகள், தங்களுடைய கடன்களை ஏற்றுமதி மூலமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். இந்நாடுகளில் பெரிய அளவில் தொழிற்துறை உற்பத்தி இல்லாமல் இருந்தால், அந்நாடுகள் தாங்கள் திரும்ப செலுத்த முடியாத பெரும் அளவு குவிந்த கடன் தொகைக்குப் பதிலாக தங்கள் இயற்கை வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உந்துதல், விவசாயத்தில் நீடித்த தன்மையில் அமைந்த நடைமுறைகளை ஒழித்து குறுகிய காலத்திற்குள் விரைவான இலாபத்திற்கான நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.

Amazone Forest fireஉலகெங்கிலும் நடைபெற்று வருகின்ற காடுகளின் அழிப்பானது, மேற்கில் உள்ள சுரங்க நிறுவனங்கள், பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனங்கள் நுழைவுக்கே ஆகும். அமேசானின் சமீபத்திய தீ விபத்துகள், மேற்கத்திய நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்காக, மேய்ச்சல் நிலத்தை உருவாக்குவதற்காக நிலத்தை வெறுமையாக்கும் திட்டமிட்ட முயற்சியாகவேத் தெரிகிறது. இப்புவியின் நுரையீரல், அதற்கு வடக்கே வசிப்பவர்கள் ஹம்பர்கரை தடையின்றி உண்பதற்கு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இது சமூக பொறுப்பைவிட தனியார் இலாபங்களை எடை போடும் ஒரு அமைப்பின் பகுத்தறிவற்ற தன்மையை காட்டுகிறது.

விஞ்ஞான எச்சரிக்கைகள் இருந்தப் போதிலும், புதைபடிவ எரிபொருட்களை ஏன் நம்மால் வெளியேற்ற முடியவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரிய புதைபடிவ நிறுவனங்கள் இதில் பாரிய முதலிடுகள் செய்துள்ளன. மேலும் அந்நிறுவனங்களின் எதிர்கால இலாபங்களை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய அரசுகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. மூன்றாம் உலக நாடுகள், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக, இயற்கை வளங்களில் முதலீடுகளைத் தேடுகின்றன. தங்களின் பொருளாதரத்தை மிகவும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் கொள்கை நடைமுறைகளுக்கும் திறக்கிறது. முதலாளித்துவம், மனிதகுலத்தை அதன் சொந்த சுய நிர்மாணமாக்கலில் பங்கு கொள்ள நிர்ப்பந்திக்கும் ஒரு தர்க்கத்திற்குள் பூட்டி வைத்திருக்கிறது.

படிக்க:
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

தனிப்பட்டநபர்களின்  வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் என்றாலும், அவை அமைப்புமுறையான நெருக்கடியை எதிர்கொள்ள அவசியமான கூட்டு நடவடிக்கைக்கு பதிலாக இருக்க முடியாது என்பதையும் இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது, இன்று மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கக் கூடிய ஒரு துடிப்பான ஜனநாயகத்தை புத்துயிர் பெறுவதில் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவைரை பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவு குறுகிய பிரச்சினையாக நீண்டகாலமாக இருக்க முடியாது. இரண்டு மாதத்திற்கு முன்னர் தட்டாவைச் சேர்ந்த விவசாயிகள் கடல் மட்டம் உயர்வானது  தங்கள் நிலங்களை மூழ்கடித்ததற்கு எதிராக ஒரு நீண்ட பேரணியை நடத்தினர். கடந்த வாரம் நாங்கள் லாகூர் அருகேயுள்ள குலலன் வாலா மற்றும் கோட் ஆசாத் உல்லா ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம். அங்கேயுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள், குழந்தைகளின் எலும்புகளில் குறைபாடுகளைத் தோற்றுவிக்கின்றன. அக்கிராமத்தை மாசுபடுத்துவர்கள் யார் என்பதை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருந்தபோதிலும் அவர்களை பொறுப்பாக்குவதற்கு இயலாமல் இருப்பதற்கு, அவர்கள் அதிக சக்திவாய்ந்தவர்களாக இருப்பதாக அக்கிராமவாசிகள் உணர்கிறார்கள். இப்பகுதிகள் தியாக மண்டலங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில் ஒரு சிலரின் செழிப்பான வாழ்க்கையை தக்கவைக்க உள்ளூர் மக்களின் வாழ்க்கை தியாகம் செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் சீர்குலைவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, அப்பகுதியின் மக்களிடமிருந்து, செல்வந்தர்கள் தாங்கள் இச்சீர்குலைவில் இருந்து தப்பிக்க ஒரு சுற்றுச்சூழல் வளையத்தை – சுற்றுச்சூழல் இன ஒதுக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஐ.நா நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நிகழ்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அடிப்படை தர்க்கத்தை கேள்விக்குட்படுத்தாமல் நாம் அதை அர்த்தமுள்ளதாக விவாதிக்க முடியாது.

வேறுவிதமாகக்  கூறினால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது என்பது ஒரு அருவமான செயல்முறையை கண்டிப்பது மட்டுமில்லாமல், நமது சூழலை நிர்ணயிக்கும் சமூக உறவுகளின் ஒதுக்குதல், ஆதிக்கம், சுரண்டல் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும் இருக்கிறது. செத்துப் போன முதலாளித்துவத்தின் சீர்குலைவான குழப்பத்திற்கு ஒரு புதிய சமூக அமைப்பு மட்டுமே நீடித்த தன்மையையும், திட்டமிடுதலையும் வழங்க முடியும்.

உலகம் முழுவதிலும் சுவர்கள் மற்றும் எல்லைகளை நிர்மாணிப்பதில் தீவிரப்படுத்தும் ஒரு பருவநிலை பேரழிவை நாம் காணப்போகிறோமா? அதற்கு மில்லியன் கணக்கான மக்களை இராணுவமயமாக்கி இச் சமூக கட்டுப்பாடுகளுக்கு அனுப்ப போகிறோமா? இல்லை உலகமெங்கிலும் உள்ள மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நுகர்வு மற்றும் உற்பத்தி கட்டுப்பாட்டை கொண்டுவரும் மாற்று முறையை உருவாக்கப் போகிறோமா? இது நாம் ஒழுங்கமைக்கப்பட்டு மீண்டும் போராட வேண்டிய நேரம்.


தமிழாக்கம் : – பரணிதரன்
நன்றி : Monthly Review 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க