கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆய்வு மாணவர்கள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் Category – B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்று முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை கண்டித்து 5.12.2019 அன்று பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்வு மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது. அதன் பெயரில் Category – B என்ற தொலைத்தூரக்கல்வி முறையை 2008-ல் உருவாக்கி, அதன் பெயரிலும் முனைவர் ஆய்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளிலோ நிரந்தர பணியில் இல்லாத ஆசிரியர்கள் நாட்டின் எங்கோ ஓர் இடத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டி முனைவர்பட்ட ஆய்வினை நடத்தலாம்.

பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்விற்கு வழங்கும் சான்றிதழையே அவர்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்தது. இந்த முறை 2009 UGC விதிமுறைகளுக்கு எதிரானது. கூடுதலாக இந்த சான்றிதழ் நாட்டின் உயர்கல்வியின் தரத்தினை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் முழுநேர ஆய்வு மாணவர்களின் வேலைவாய்ப்பினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றும் 2015-ல் முழுநேர ஆய்வு மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி அந்த தொலைத்தூரக்கல்வி சான்றிதழில் “Under External mode” என்று குறிப்பிட்டு வேறுபடுத்தி காட்டியது.

படிக்க:
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

ஆனால், தற்போது சிண்டிகேட் கமிட்டி மீண்டும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட Category – B என்ற பிரிவில் 2015-க்கு முன் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் “Under External mode” என்ற குறியீட்டை நீக்கி முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும், Category – B யில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க முடிவெடுத்து அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவானது தற்போதுள்ள முனைவர்பட்ட ஆய்வு மாணவர்களை சீற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்து கடிதத்தின் வாயிலாக 300-க்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் 05.12.2019 அன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க