குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை பல்கலை மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் போராட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே ஜன-2 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

கோவை:

கோவை – அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து நடைபெறுகின்றன. இதன் தொடர் விளைவாக கோவையில் கோவை அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் பிஎஸ்ஜி கலைக் கல்லூரி ஆகியவற்றில் கடந்த டிசம்பர்-18, 19 ஆகிய தேதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரின் வாகனத்தை வழிமறித்த கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள் :

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் வருகையின்போது மாணவர்கள், அவரது வாகனத்தை வழிமறித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

PSG கலைக்கல்லூரி மாணவர்கள் :

கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் :

கோவை அரசு சட்டக்கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றிருக்கும் வேளையில் மாணவர்கள் தங்களது தேர்வுகளை புறக்கணித்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-22 அன்று கோவை காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் :

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :

டிசம்பர்-19 அன்று கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் அதனை சரிசெய்வதற்கான உருப்படியான முயற்சிகள் எடுக்க முன்வராத மோடி அரசு, அவசரகதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பியும்; மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயலும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதியை அம்பலப்படுத்தியும் கல்லூரி மாணவர்களிடையே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் உரையாற்றினர்.

கும்பகோணம் வழக்கறிஞர்கள் :

கும்பகோணம் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பாக, வழக்கறிஞர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  கடந்த டிசம்பர்-20 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் குருமூர்த்தி, கருணாமூர்த்தி, மகேந்திரன் ஐயப்பன் நிம்மதி, ரமேஷ்குமார், சிவராஜ் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். கருப்புச்சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுப்பு :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க