லையும் மேங்காங் நதிக்கரையும் என சுற்றி நிலப்பரப்புகளால் சூழ்ந்த நாடு. இயற்கை எழில் கொஞ்சும் பூமி, பரந்து விரிந்த கலாச்சாரம் என்றாலும் வலிமிகுந்த, கடந்த கால நினைவுகளை சுமந்து எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கும் லாவோஸில் ஓர் பயணம்…

வியட்நாம் முடித்துக்கொண்டு லாவோஸ் சென்றோம். போகும் வழியெல்லாம் இயற்கை செதுக்கிய சிற்பங்களாய் மலைகளும், குகைகளும் வழிமுழுக்க நடனங்களை அறங்கேற்றிய படி அதன் அழகில் மயங்குவது போன்று ஓர் உணர்வு. காலையில் கண் விழிக்கையில் லாவோஸ் தூதரகத்தின் வாசலில் விசாவிற்கு நின்று கொண்டுருந்தோம். சிறிது நேரம் கடந்து விசா எடுத்தபின் வெளியில் வந்தோம். ஒரு கடையில் அதிகாரி ஒருவர் ’போ’ என சொல்லப்படும் நூடுல்ஸ் சூப் சுடச்சுட சாப்பிட்டுக் கொண்டுருந்தார். ’போ’வை வாங்கிச் சாப்பிட அப்படி ஒரு சுவை. நான் சுவைத்த சூப்பில் மனதை கவர்ந்தும் இதுவே. அங்கிருந்து லாவோஸின் தலைநகரம் வியன்டியன் (வியஞ்சான்) சென்றோம்.

வியன்டியன் சென்றுதும் அங்கு சிறிது ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்த ஓரு பங்களாதேஷ் உணவகத்தில் மதிய உணவை முடித்து COPE எனும் பார்வையாளர் விடுதிக்கு சென்றோம். அங்கு போரின் துயரங்களையும் அதன் தாக்கத்தையும் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காணொளியாக பார்க்கும் போது கண்களில் நீர் ததும்பியது. உலகில் அதிக குண்டுகளை தன் மண்ணில் சுமந்திருக்கும் நாடு. அன்றைய நாள் முழுவதும் அதன் பாதிப்பு தூக்கத்தை கலைத்தது.

லாவோஸ் நிலவியல் பரப்பு

லாவோஸ் சுற்றிலும் நிலப்பரப்பால் சுழ்ந்த நாடு. இது தான் கிழக்கு ஆசியாவிலே நிலத்தால் சூழப்பட்ட ஒரே நாடு. இது பர்மா, சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா என ஐந்து நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு மேங்காங் நதிக்கரையின் வழியே வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைநகரம் வியன்டின்.

வியன்டின் லாவோஸின் மிக பெரிய நகரம் அதுமட்டுமல்லாமல் தாய்லாந்திற்கும் லாவோஸுக்கும் மேங்காங் நதியின் வழியே போக்குவரத்து இங்குதான் நடந்து வருகிறது.

வாழ்வியலும் மக்களும்

லாவோஸ் பண்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு, 55 சதவித மக்கள் மான் கீமார் மற்றும் ஹமான் என மலையின் கீழ் வாழ்பவராகவும் 45 சதவித மக்கள் மலை பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். லாவோ மக்கள் லாவோமும், பிரெஞ்சையும் ஆட்சி மொழியாக கொண்டுள்ளனர்.

லாவோஸ் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. லாவோஸ் மேங்காங் நதியின் மூலம் மின்ஆற்றலை உற்பத்தி செய்து தாய்லாந்து, வியட்நாமிற்கு கொடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்கிறது. தற்போது பக்கத்து நாடுகளுடான உறவை மேம்படுத்திக்கொள்ளவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நான்கு நாட்டிற்கு இடையிலான ரயில் பாதைத்திட்டத்தை நிறுவியுள்ளது. உலக வங்கி கிழக்காசியாவிலே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவும், கடந்த பத்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 சதவித வளர்ச்சியைக் கொண்டுள்ளது லாவோசைக் குறிப்பிடுகிறது.

படிக்க:
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

லாவோஸின் வரலாறு

வியன்டின் 1573-லில் பர்மிஸிடமிருந்தது, 1827 -லிருந்து பிரெஞ்சு அரசாங்கம் இதை தன் கையில் வைத்திருந்தது. அதனால் இன்றும் அது ஒரு பிரெஞ்சு நகரமாவே தோற்றமளிக்கிறது.

வியன்டினில் பட்டுக்குசாய் போர் நினைவகம், புத்த கோவில்கள், இயற்கை அழகு என எங்கும் ஆர்ப்பரிக்கிறது. இங்கு லான் சாங் ஹாம் கோவ் அதாவது மில்லியன் வெள்ளை யானைகளை கொண்ட அரசாங்கம். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கிழக்காசியாவிலே செல்வ செழிப்புமிக்க அரசாக இருந்துள்ளது. பின் உள்நாட்டுக் கிளர்ச்சியால் லூவாங் பிராபாங், வியன்டின் மற்றும் சாம்பாசக் என மூன்றாக பிரிந்தது.

பட்டுக்குசாய் போர் நினைவகம்

பின்னர் 1893-ல் பிரான்ஸ் தனது காலனி ஆதிக்கத்தின் மூலம் மூன்றையும் ஒன்றிணைத்து லாவோஸ் என்று பெயரிட்டது. பிறகு 1943-லிருந்து ஜப்பான் தன் ஆதிக்கத்தை செலுத்த முயன்றது. அது 1949 போரைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. பின்னர் பிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்று 1953-ல் லாவோஸ் தனி நாடாக அரசர் சிஸ்சாவோங் வாங் ஆட்சியின் கீழ் 1959 வரை நீடித்தது.

இதற்கிடையில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கம்யூனிசம் லாவோஸில் கால் ஊன்றியது. வியட்நாம் போர் முடிவுக்கு வந்த நிலையில் 1975-ல் லாவோஸும் மன்னராட்சிலிருந்து மீண்டு, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு ஒரு கட்சி ஆட்சி முறையே கடைபிடிக்கப்படுகிறது. வியட்நாம் போரில் ஹோ சி மின் பாதை (Hochi Minh Trial) என்று உண்டு. அந்தப் போர் ஏற்படுத்திய துயரங்களில் பெரும் பகுதி  இங்கு தான் புதைந்துள்ளது.

ஹோ சி மின் பாதை

ஹோ சி மின் பாதை என்பது வியட்நாம் போரின்போது வியட்-காங் மற்றும் வட வியட்நாம் இராணுவத்திற்கு தளவாட ஆதரவை வழங்குவதற்காக வட வியட்நாமில் இருந்து தென் வியட்நாமுக்கு அண்டை நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா வழியாக கட்டப்பட்ட சாலைகளின் வலையமைப்பாகும். இது சைக்கிள் போக்குவரத்திற்கும் மற்றும் வியட்-காங் போராளிகளும் பயன்படுத்தும் சாலை. இந்த பாதை 16,000 கிலோமீட்டர் (9,940 மைல்) தடங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகளின் வலைப்பின்னல் ஆகும்.

வியட்நாம் மக்கள் இராணுவம் தெற்கிற்கு போர் பொருட்களை கொண்டு செல்ல ஒரு ரகசிய சாலை அமைப்பை உருவாக்க முடிவு செய்திருந்தது. ஆரம்பத்தில் 559 குறியிடப்பட்ட வலைப்பின்னலாக உருவாகி இறுதியில் ஹோ சி மின் பாதை என அறியப்பட்டது. ஹோவின் பிறந்த நாளான மே 9, 1959-ல், 440 இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய இராணுவ போக்குவரத்து பிரிவு 559 -ஐ நிறுவியதன் மூலம் பாதை அமைத்தல் தொடங்கியது.

அடுத்த 16 ஆண்டுகளில், இந்த பாதை கடுமையான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் இருந்தபோதிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வட வியட்நாமிய வீரர்களையும், தென் வியட்நாமில் போர்க்களங்களுக்கு ஏராளமான பொருட்களையும் கொண்டு சென்றது

வியட்நாமிற்குள், மத்திய வியட்நாமில் உள்ள மலைத்தொடருக்குப் பிறகு இது டேங் த்ரோங் சன்(Ðuong Truong Son), அல்லது த்ரோங் சன் (Truong Son) என அழைக்கப்பட்டது. இந்த பாதைக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயர் “தி பிளட் ரோடு (The Blood Road).” இடைவிடாது அமெரிக்க ராணுவம் பெரும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தியும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

பாதையில் இறந்தவர்களில் குறைந்தது 10 சதவீதம் பேர் மலேரியா போன்ற நோய்களினால் இறந்தவர்கள். வழியிலேயே இடைவெளியில், தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எஃப்) அடிப்படை முகாம்களைக் கட்டியது. அவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடத்தை வழங்குவதோடு, பயணத்தில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அடிப்படை முகாம்கள் மருத்துவ சிகிச்சையை வழங்கின. அடிப்படை முகாம்களில் பெரும்பாலானவை நிலத்தடியில் இருந்தன.

கையால் தோண்டப்பட்ட, மறைக்கப்பட்ட நுழைவாயில்களுடன் சிக்கலான ஒன்றோடொன்று இணைக்கும் சுரங்கங்கள். மலையேறுபவர்களை மறைத்து வைத்தன. பெரும்பாலும் அவர்களைத் தேடும் அமெரிக்க துருப்புக்களின் காலடியில் நேரடியாக போராளிகள் சிக்கவில்லை. வானொலி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், உணவு மற்றும் ஆயுதங்கள், மருத்துவ உதவி நிலையங்கள் அனைத்தும் நிலத்தடியில், ஆயிரக்கணக்கான வட வியட்நாமியர்களை போரின் போது மறைத்து வைத்தன. பாதை அமைப்பு மிகவும் மேம்படுத்தப்பட்டது. அதிகமான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்தினார்கள். ஹோ சி மின் பாதையில் காடுகளின் வழியாக கடுமையான மலையேற்றத்தை மேற்கொள்ள ஒரு வட வியட்நாமிய சிப்பாய்க்கு ஆறு மாதங்கள் ஆகுமாம்.

வடக்கு வியட்நாமியர்கள் ஹோ சி மின் தடத்தையும் பயன்படுத்தி தெற்கே வீரர்களை அனுப்பினர். சில நேரங்களில், ஹனோயிலிருந்து ஒரு மாதத்திற்கு 20,000 வீரர்கள் இந்த வழியில் வந்தார்கள். இந்த போக்குவரத்தை தடுக்கும் முயற்சியில், மெக்னமாரா லைன் எனப்படும் முள்வேலி மற்றும் கண்ணிவெடிகளின் தடையை கட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. தடையை நிர்மாணிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது என்.எல்.எஃப் பலமுறை தாக்குதல் நடத்திய பின்னர் இந்த திட்டம் 1967-ல் அமரிக்காவால் கைவிடப்பட்டது.

ஹோ சி மின் பாதையை தரைப்படைகளுடன் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை, ஏனெனில் அது கடந்து வந்த நாடுகள் அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தன. விரிவான வான்வழி குண்டுவெடிப்பு வட வியட்நாமியர்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான டன் போர் பொருட்களை ஹோ சி மின் பாதையில் தெற்கே நகர்த்துவதை தடுக்கவில்லை. இந்த பாதையை யுத்தத்தின் மையத்தில் மறுக்கமுடியாது. வடக்கு வியட்நாமியர்களுக்கு ஹோ சி மின் பாதை போர்க்கள ஆயுதம் போன்றே உதவியது. இந்த நடைபயணம் ஒரு தலைமுறையின் மைய அனுபவமாக மாறியது.

நவம்பர் 11, 1968-ல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆபரேஷன் கமாண்டோ ஹன்ட் (Operation Commando Hunt) தொடங்கப்பட்டது. லாவோஸ் வழியாக தெற்கு வியட்நாமிற்குள் ஹோ சி மின் பாதையில் ஆண்கள் மற்றும் பொருட்களை தடை செய்வதே இந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது. செயல்பாட்டின் முடிவில், லாவோஸில் மூன்று மில்லியன் டன் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் தமது பாதை நடவடிக்கைகளை இது பாதிக்காதிருக்க வியட்நாமியர்கள் கடுமையான வழிமுறைகளை கையாண்டனர்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் தேசிய பாதுகாப்பு அமைப்பின் யுத்தத்தின் உத்தியோகபூர்வ வரலாற்றின் படி, ஹோ சி மின் டிரெயில் அமைப்பு 20-ம் நூற்றாண்டின் இராணுவ பொறியியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாங்கள் COPE முடித்துவிட்டு மறுநாள் பட்டுகுசாய் போர் நினைவகம் சென்றோம். இது பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இராண்டாம் உலகப்போரில் லாவோசின் சிப்பாய்கள் உயிர் துரந்ததை நினைவு கூர்வதற்காக கட்டப்பட்டது. இது பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Arc de Triomphe போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் அங்கிருந்து லோன் பிராபங்க சொன்றோம் இது யுனஸ்கோவால் பாதுக்காக்கப்பட்ட உலக பராம்பரிய இடம். முற்றிலும் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்களும், புத்தக்கோவில்களும் நிரம்பியுள்ள நகரம். சுற்றிலும் மலைப்பிரதேசம் என கண்களை கொள்ளை கொண்ட இயற்கை…

பின் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து குவங்சி அருவியை கொட்டும் மழையில் நனைந்தவாறே சென்றடைந்தோம். போகும் வழியெல்லாம் விவசாய நிலங்கள் அவர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு அருவிக்கு சென்றோம். மூன்று அடுக்கு அருவி அது பார்ப்பதற்கு செயற்கை அருவி போன்றே ஓரு பிம்பம். கண்களுக்கு விருந்தளித்த அருவியிடம் உடலை ஒப்படைத்து ஓரு குளியல். நேரமின்மை காரணமாக நாங்கள் ஒரு வாரம் மட்டுமே தங்கினோம். பிரிய மணம் இல்லாமல் அங்கிருந்து லோன் பிராபாங் திரும்பினோம். பின் அங்கிருந்து தாய்லாந்து வந்து இந்தியா திரும்பினோம். லாவோஸ்  பயணத்தில் போர் எவ்வளவு பயங்கரமானது என்பது  மனதில் தீராத வலியாகவே நிரம்பி உள்ளது…

சிந்துஜா சமூக ஆர்வலர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க