நான் ஒரு ஐடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். தினமும் மாலை அந்நிறுவன ஊழியரை சேத்பட் பகுதியில் பிக்கப் செய்வது வாடிக்கை. இன்றும் அங்கு சென்றிருந்தேன். தொடர்ந்து மூன்றாண்டுகளாக செல்வதால் அங்கு அருகிலிருக்கும் பெட்டிக்கடைகாரர் பழக்கம்.

அஞ்சு கோடிப் பேரையும் இப்படித்தான் சேத்திருப்பாங்களோ…

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு ஐம்பது வயது மதிக்கக்கூடிய மனிதர் வந்தார் கடைக்காரரிடம், “அவசரமா ஒரு நம்பருக்கு கால் பண்ணனும் உங்க மொபைல் போன் குடுங்க” என்று கேட்டார். உடனே கடைக்காரர், “அய்யயோ என் போன் வீட்டிலேயே மறந்து வச்சிடேன்” என்றார்.

கடைக்காரர் என்னைப் பார்த்து, “சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க” என்றார். நானும் பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் அதை அவசரமாக வாங்கி ஒரு எண்ணை டயல் செய்து விட்டு எதுவும் பேசாமல் எதையோ குறித்து கொண்டு கைபேசியை தந்து விட்டு நகர்ந்தார்.

அவர் சென்றவுடன் எனது கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தியும் அதில் ஒரு otp-யும் வந்திருந்தது அதைதான் அவன் குறித்துக் கொண்டு சென்றான் போல. எனக்கு நல்ல கோபம். கடைக்கராரிடம் காண்பித்தேன். ”அய்யோ எனக்கு ஏதும் தெரியாதுங்க என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.

என்ன ஒரு கேவலமான செயல். கோபத்துடன் அவனைத் தேடி தெருமுனைக்கு சென்று விசாரித்தேன். அங்கிருந்த டீக்கடைகாரரும் சில துப்புரவு தொழிலாளர்களும் இப்பதாங்க எங்ககிட்டையும் போன வாங்கி பேசினாருங்க என்றனர். பிஜேபி உறுப்பினர் என்பதை ரத்து செய்ய ஏதும் வழி உள்ளதா.?? தயவு செய்து இது குறித்து உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க அண்ணா… (பிஜேபி உறுப்பினர்) அந்த சொல்லை கேட்டாலே அருவருப்பாகவுள்ளது…

நன்றி முகநூலில் : karthi prithvi

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க