பேர் கிரில்ஸ் உடன் பந்திப்பூர் புலிகள் சரணாலயம்… மைசூர், முதுமலை, வயநாடு எல்லைகளில் முதுமலையில் இருந்து பயணம் தொடர்கிறது. மைசூர் கர்நாடக எல்லை வழியே வயநாட்டில் இறங்குவதுதான் திட்டம்.

சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், தூக்கம், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அனைத்தையும் பேர்கிரில்ஸ் கற்பிப்பார்.

காலை ஏழு மணி …

பேர்கிரில்ஸ் குதித்து ஓடுகிறார், பாறைகளை தாண்டுகிறார். நம்ம சூப்பர் பின்னால் வந்த கேமராமேனைப் பார்த்து என்னோட டூப்பு எங்கே என்கிறார்.

டைரக்டர் முறைக்க….

நிலைமையை உணர்ந்த பேர்கிரிஸ்ல் கைத்தாங்கலாக ரஜினியை அழைத்து செல்கிறார்… பயணம் தொடர்கிறது.

அய்யோ பாம்பு என ரஜினி கத்த…
அய் சாப்பாடு என பேர் குதிக்க…..
தலையை வாயால் கடித்துத் துப்பி நடுக்கண்டத்தை ரஜினிக்கு நீட்டுகிறார்…

உவ்வேக் என வாந்தி வரவும்… தானே முழுதையும் தின்றுவிட்டு நடக்கிறார்… கைத் தாங்கலாக ரஜினியும்…

ரஜினிக்கு சாப்பாடு வேண்டுமே என சிந்திக்கிறார் பேர்….
ரஜினி யானை சாணம் மேல் காலை வைத்து உதற…
சாணியை கிளறுகிறார் பேர்….

உள்ளே பலாக்கொட்டைகள் தென்பட உற்சாகமாக அதைப் பொறுக்கி எடுத்து, தணலில் போட்டு உறித்துத் தருகிறார்…. ரஜினி முகம் போன போக்கைப் பார்த்து… முழுதையும் தின்றுவிட்டு நடை தொடர்கிறது…. (கைத் தாங்கலாக ரஜினியோடு)

மதியம் ஆகிறது காவிரி தென்படுகிறது, ரஜினிக்காக மீன் பிடிக்கிறார் பேர்… அதை ஒரு கோப்பையில் போட்டு அவித்து… சூப்பு தர அதை ரஜினி குடிக்க… குழு உற்சாகம் ஆகிறது.

சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை நடை தொடர்கிறது…

படிக்க:
♦ 5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !
♦ முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !

இருள் சூழத் தொடங்க ஏதோ கயிறு என நினைத்து ஒரு விழுதைப் பிடிக்கிறார் ரஜினி, சடாரென அது ரஜினியை சுற்றிவளைக்க… அய்யோ அது மலைப்பாம்பு…

பேர் களத்தில் இறங்கி பாம்பை ரஜினியிடமிருந்து மீட்கிறார்.

சுற்றி வளைத்ததில் மதிய மீன் சூப்பும், சாப்பாடும் வெளியேறி விட்டது வாந்தியாக..
படையப்பா படத்தில் பாம்பு பிடிப்பது கண்ணில் வருகிறதா…?

இரவு மரத்தின் மேலே தூங்கமுடிவெடுத்து பரண் அமைத்து முடிக்க…. ரஜினிக்கு அந்நேரம் பார்த்து ஒன்னுக்கு வர… கீழே பார்த்தால் ரஜினியை ஒரு கரடி பார்க்கிறது….

மூத்திரத்தை கரடி மீதே அடித்துவிட அது தலை தெறிக்க ஓடுகிறது… எனக்கே இந்த வித்தை தெரியாதே என பேர் வாய் பிளக்க…!?!

பயத்துல அதுவே கழிஞ்சுடுச்சு என ரஜினி கூற…

கழிஞ்சது ஒன்னுக்கு மட்டுமா அல்லது ரெண்டுமா என கேட்க…

வயிறு காலி பேர்ர்ர்ர் எப்படி ஆய் வரும்னு சொல்ல…

இந்தாளோட படா பேஜாரா கீது என பேர் புலம்ப… காலையில் நடை, தளர்வாக ரஜினியும் செல்ல…. ஒரு தென்னை மரம் தென்பட இளநீர் தருகிறார்…
வழுக்கையை சீவட்டுமா என பேர்ர் கேட்க….

எனக்கே வழுக்கை எனக்கும் வழுக்கை என ரஜினி தெம்பாக பேச…

ஒரு போன் வருகிறது…
மறுமுனையில் மோடி…

ஹல்லோ ரஜினி எப்படி இருக்கு..?

பயமா இருக்கு என இவர் பேச….

கேமராமேனைப் பார்த்து பேசு மேன் தைரியம் வரும் என அட்வைஸ் கூறுகிறார்.
சிக்னல் கட்டாகிறது…

வழியில். திடீரென… அது தென்பட குழு உசார் ஆகிறது…

– தொடரும்

நன்றி : ஃபேஸ்புக்கில் ராஜா ஜி 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க