ந்த ஊரடங்கால் கீழ்நடுத்தரவர்க்கத்தினரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களும் கடுமையான துன்பத்தில் இருக்கிறார்கள். இதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால், நாட்டு மக்கள் அனைவருக்குமே ரேஷன் அட்டை தர வேண்டும்; இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பலரும் சொல்லிவிட்டார்கள்.

மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அளித்தாலும் அவை ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நியாயவிலைக் கடைகளை நடத்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டிலும் அரிசி வாங்கக்கூடிய கார்டுகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

இப்படி தெரிவுசெய்து உதவிகளை வழங்குவதால் உதவிகளைப் பெற வேண்டிய பலர், உதவி கிடைக்காமல் போகிறார்கள் என அமர்த்தியா சென், ஷான் த்ரே, அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களிலிருந்து சோனியாகாந்தி வரை பலரும் சொல்லிவிட்டார்கள்.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இருந்தாலும்கூட, நகர்ப்புறத்தில் 50 சதவீதம் கிராமப் புறங்களில் 75 சதவீதம் மக்களையே அது பாதுகாக்கிறது. அதாவது ஒட்டுமொத்தத்தில் 67 சதவீதம் பேர் மட்டுமே அந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறார்கள்.

இந்த 67 சதவீதம் பேரிலும் கிட்டத்தட்ட 11 கோடிப் பேருக்கு ரேஷன் கிடைக்காது என்கிறது தி வயர் இணையதளத்தில் வந்துள்ள ஒரு கட்டுரை.

காரணம், இந்தச் சட்டம் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து உணவு தானியத்தைப் பிரித்தளிக்கிறது. 2011ல் மக்கள் தொகை 121 கோடி. ஆனால், 2020ல் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி. இதில் 67 சதவீதம் பேருக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டுமென்றால் 92.1 கோடி பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதென்னவோ, முந்தைய கணக்குப்படி 81.3 கோடி பேருக்குத்தான். ஆக, ரேஷன் பொருள் கிடைக்க வேண்டிய 10.8 கோடி பேருக்கு, பொருட்கள் கிடைக்காது.

இதில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்கள்.
இந்தப் பிரச்சனைக்கு அமர்தியா சென், அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்றவர்கள் ஒரு தீர்வை வழங்குகிறார்கள். அதாவது ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்க ரேஷன் அட்டைகளை வழங்கி, அவற்றின் மூலம் உணவு தானியங்களை வழங்குவது.

படிக்க:
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
♦ உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

இப்படி வழங்குவதற்குத் தேவையான உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது 7.7 கோடி மெட்ரிக் டன் தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வரும் அறுவடை சீசனில் 4 கோடி டன்கள் கொள்முதல் செய்யப்படும். 110 கோடி மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியை கொடுத்தால்கூட, 6.6 கோடி டன் தானியம்தான் தேவைப்படும்.

சமாளிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதால் ஏற்படும் கூடுதல் செலவைவிட, விலையில்லா அரிசி இல்லாவிட்டால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் சிலர் விட்டுப்போனால் ஏற்படும் சமூகச் செலவு அதிகம் என்கிறார்கள் ரகுராம் ராஜன், அமர்தியா சென், பேனர்ஜி ஆகியோர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராதவர்களின் சதவீதம் நாட்டிலேயே பிஹாரில்தான் அதிகம். 14.17 சதவீதம். அதற்கு அடுத்த இடம் உத்தரப்பிரதேசத்திற்கு. நமக்கெல்லாம் முன்மாதிரியாக வைக்கப்படும் குஜராத்தில் 7.46 சதவீதம் பேர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருவதில்லை.

இதில் சிறப்பாக செயல்படுவது தமிழ்நாடும் கேரளாவும். கேரளாவில் 2.82 சதவீதம். தமிழ்நாட்டில் 3.72 சதவீதம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க