Thursday, April 17, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுகொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன...

கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.

-

நாள் 22-4-2020

அன்புடையீர், வணக்கம்!

கொரோனா நெருக்கடியையும், தொடரும் ஊரடங்கையும், அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் கோரிக்கைகளை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, தமிழக மக்களை கவன ஈர்ப்பு நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம்.

எங்களது  இத்தகைய முன்னெடுப்பு தொடக்கம் மட்டுமே. இதில்  பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர் – இளைஞர் அமைப்புகள், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக தங்களது அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு நிகழ்வில் பங்கேற்பதுடன், மக்களையும் இதில் பங்கேற்க அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எதிர்வரும்  26 – 04 – 2020 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோரிக்கை எழுதிய அட்டைகளோடும், கறுப்புத் துணிகளோடும், அவரவர் வீட்டு வாயிலில் அல்லது மாடியில் உரிய இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் நிற்கும் படி தமிழக மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்

இந்திய அரசே!

கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.

  1. உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
  2. நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
  3. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
  4. தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
  5. மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரிய போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.

அவரவர் வீட்டு வாசலிலோ, மாடியிலோ அட்டை, தாள், அல்லது சிலேட்டில் கோரிக்கைகளைச் சுருக்கமாக எழுதிக் கறுப்புத் துணிகளுடன்  உரிய பாதுகாப்பு இடைவெளியுடன், கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கு பெற அழைக்கிறோம். மக்களுக்காக இந்திய அரசை செயல்பட வைக்க வீட்டிலிருந்தே ஒன்றாக நின்று நாம் குரலெழுப்புவதை தவிர வேறு வழியில்லை எனக் கருதுகிறோம்.

ஊடகங்கள் இந்தக் கவன ஈர்ப்பு இயக்கத்தை செய்தியாக்குவதன் ஊடாக ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

நன்றி!

இப்படிக்கு,

  1. தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
    கைபேசி. 8939154752
  2. வழக்கறிஞர் சி. ராஜு, மக்கள் அதிகாரம்
    கைபேசி 9443260164
  3. கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக்கழகம்
  4. கோவை கு. இராமகிருட்டிணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
  5. திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்
  6. நாகை.திருவள்ளுவன், தமிழ் புலிகள் கட்சி
  7. பாலன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி
  8. குடந்தை அரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி
  9. சிவ.செந்தமிழ்வாணன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
  10. சிதம்பரநாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை)