வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் ! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
இந்திய அரசே!
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க…
1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்ற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், நமது ஆதரவாளர்களும், நண்பர்களும் பங்கேற்ற புகைப்படங்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வீட்டிலிருந்து குரலெழுப்புவோம். திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்த நிகழ்வு புகைப்படங்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.