Wednesday, April 16, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !

மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக 01.06.2020 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

-

மிழக விவசாயிகள் சங்கம் ( கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் ஐயா ம.ப. சின்னத்துரை தலைமையில் பொதுநல அமைப்புகள் சார்பாக 01.06.2020 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஐய்யா.ம.ப.சின்னத்துரை தலைமையில் முழக்கமிட்டு தொடங்கியது.

மத்திய, மாநில அரசுகள், கொண்டுவரவுள்ள “மின்சார சட்டம் திருத்தம் 2003” விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. என்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்றும், மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் சதி! என்றும் கண்டித்து பேசினர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை கீழ் கொண்டு வருவதை கண்டித்தும், இதனால் 12 டெல்டா  மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்படுவதும் 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுவர், நாட்டின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாய பகுதி, பாலைவனமாக மாறும் என கண்டித்து பேசினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிய புதிய சட்டங்களை போட்டு மோடி அரசு பொதுத்துறையை தனியார் மயமாக்குவது விவசாயிகளுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரும் மாநில அரசின் உரிமைகளை பறித்து செயல்படுவதை கண்டித்து பேசினர்.

மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் அவர்கள் பேசுகையில் ”திருச்சி திருவரம்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பம் நேற்று தனது தனது மகன் 9 மாதத்திற்கு முன்பாக விபத்தில் அடிபட்டு வீட்டில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று இறந்து விட்டார். வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு இனியும் தனது இரண்டு மகள்களின் எதிர்காலத்தை எண்ணி மனம் நொந்து ஆசிரியை எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு நெருப்பு பற்ற வைத்து தனது வயதுவந்த இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நாட்டு குடிமக்களுக்கு பொறுப்பான தமிழக முதல்வர் எடப்பாடி அரசு மக்களை பாதுகாக்க மக்களை பாதுகாக்க தவறி, உணவு, உடை இருப்பிடம் வாழ வழியின்றி கொரோனா பாதிப்பில் தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல கொலை!” என்று உணர்ச்சிபொங்க பேசினார்.

படிக்க:
♦ இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்
♦ படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச் சலுகை அள்ளிக்கொடுத்தும், கடன்களை தள்ளுபடியும் செய்கிறது. சாதாரண ஏழை மக்க குடும்ப செலவுக்கு வாழ வழியின்றி தற்கொலை செய்துகொள்கின்றனர். எடப்பாடி அரசு மக்களை பாதுகாக்காமல், கொலை செய்திருக்கிறது என்றார்.

காவல்துறையின் தடையை மீறி சுமார் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் எழுட்சியுடன் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் திரு மகேஸ்வரனும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் திரு சம்சுதீன் அவர்களும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வின்சென்ட் அவர்களும் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் திரு பஷீர் அவர்களும் மக்கள் அதிகாரம் தோழர் ராஜா மற்றும் நிர்மலா தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு ராஜா சிதம்பரம் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனது கண்டனங்களை பதிவு செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்திற்கு பல ஊர்களிலிருந்தும் விவசாயிகள், பொது நல அமைப்பினரும் பெண்களும் என 180க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டு மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளை கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர் தோழர் ரவிக்குமார் அவர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இறுதியாக… ஐயா ம.ப. சின்னத்துரை தலைமையில் பொதுநல அமைப்புகள் சார்பாக அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தினர். அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் கடன்கட்ட நெருக்கடிதரும் நபர்கள் குறித்து புகார் தெரிவித்தபோது பாதிக்கப்பட்டவர்களுடன் புகார் அளித்தால் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க