கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலிலும், மாணவர்களின் உயிர் மீது விளையாடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து! தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கி 15.7.2020 ஆர்ப்பாட்டம் நடத்த்தப்பட்டது. அந்த வகையில்,

  • கொரோனா தீவிரமாகும் போது பல்கலை கழக தேர்வுகளை மாணவர்களின் உடல்நலன் கருதி நடத்தக்கூடாது!
  • பொறியல் படிப்புக்கான ஆன்-லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • சி.பி.எஸ்.சி கல்வி வாரியம் 30 % பாடப்பிரிவுகள் நீக்கத்தை திரும்ப பெற வேண்டும்!
  • நீட் தேர்வை ரத்து செய்து ,+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும்!
  • தமிழகம் மாநில அதிகாரம் பெரும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்!

ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக, ஐந்து கிராமங்களில் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி(RSYF).
விழுப்புரம், தொடர்புக்கு : 91593 51158