குறுங்குழு வாதம் பற்றி

கட்சியின் வேலை முறையினைச் சீர் செய்க” என்பதிலிருந்து (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 3)

“குறுங்குழுவாத சிக்கல் குறித்து இப்போது பேசுவோம்.”

ருபது ஆண்டுகளாக உருக்காக வார்க்கப்பட்ட நம் கட்சியில் குறுங்குழு வாதம் ஆதிக்கம் செலுத்துவது என்பது இனிமேல் இல்லை . கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் குறுங்குழு வாதத்தின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணக்கிடக்கின்றன. கட்சியின் உள்ளே நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை கட்சித் தோழர்களை விலக்கி வைத்து ஒற்றுமைக்கும் இணைவுக்கும் தடையாக உள்ளது. கட்சியின் வெளி உறவில் நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை, கட்சியை வெகுமக்களோடு இணைக்கும் – கட்சியின் வேலைக்குத் தடையாக உள்ளது. இதனை வேரறுப்பதன் மூலம்தான், நமது கட்சித் தோழர்களிடையே இணைப்பை ஏற்படுத்துவது, மக்களை ஒன்றுபடுத்துவது என்ற தன் மாபெரும் கடமையில் தடையற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“உட்கட்சியில் நிலவும் குறுங்குழுவாத மிச்ச சொச்சங்கள் என்ன? பின்வருவன அவைகளில் முக்கியமானவை:

“முதலில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துவது. சில தோழர்கள் முழுமையைப் புறக்கணித்து, பகுதி நலனைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதுமே தங்கள் பொறுப்பில் உள்ள வேலைகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமது சொந்தப் பகுதிநலன்களுக்கு, முழு நலன்களையும் எப்போதும் அடிபணிய வைக்கின்றனர். அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜன நாயகம் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மத்தியத்துவம் அவசியமென்பதை அறிந்து கொள்ளவில்லை. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கும் , கீழ்மட்டம் மேல்மட்டத்திற்கும், பகுதி முழுமைக்கும், அனைத்து ஊழியர்கள் மத்தியக் குழுவுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பை மறந்து விட்டார்கள். காங்-குவாட்டா மையக்குழுவில் தனது “சுதந்திர” நிலையை வலியுறுத்துவதன் மூலம் கட்சிக்குத் தனது துரோகத்தனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு கோமிங்டாங் ஏஜண்டாக மாறினர். இப்போது நாம் விவாதித்து வரும் குறுங்குழுவாதம் அபாயகரமான ஒன்றாக இல்லாதபோதும், இதற்கு எதிராகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். முழுமையின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கட்சித் தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சி ஊழியரும், ஒவ்வொரு அறிவிப்பும், ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சியின் முழு நலன் என்ற நோக்கில் இருந்து தொடர வேண்டும். இந்தக் கொள்கையை மீறுவது என்பது முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒன்று.

இந்த வகையான சுதந்திர நிலையை வலியுறுத்துபவர்கள், தனக்கு முதலிடம் என்ற கொள்கையில் பற்றுக்கொண்டு கட்சி, தனி நபர் உறவு குறித்துச் சிக்கலில் பொதுவாகத் தவறிழைக்கிறார்கள். பேச்சளவில் கட்சிக்கு மரியாதை கொடுத்துப் பேசிய போதிலும் நடைமுறையில் தன்னை முதன்மைபடுத்தி, கட்சியை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் என்ற நோக்கத்திற்காக உள்ளனர். ஒரு வேலைப் பிரிவின் பொறுப்பு அவர்களுக்கு வைக்கப்படும் போதெல்லாம் தங்கள் “சுதந்திர” நிலை குறித்து வலியுறுத்துகிறார் கள். இந்த நோக்கத்தில் சில நபர்களை உள்ளுக்குள் இழுக்கிறார்கள். மற்றவர்களை வெளியில் தள்ளுகிறார்கள். தற்பெருமை, முகஸ்துதி செய்து கவர்வது பேன்றவற்றைத் தோழர்களிடையே செய்கிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவக் கட்சியின் கொச்சை நடைமுறைகளை கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களின் பொறுப்பற்ற தன்மைதான் அவர்களை வருத்தும் நிலைக்கு உள்ளாக்குகிறது. நாம் நேர்மையோடு செயல்பட வேண்டும் என நம்புகிறேன். ஏனெனில் நேர்மையான செயல் இல்லாமல் உலகின் எந்த ஒன்றுடனும் இணைவது என்பது முழுக்க முழுக்கச் சாத்திய மில்லை.

“நேர்மையான நபர்கள் யார்? மார்க்ஸ், ஏங்கெல்ஸ், இலெனின், ஸ்டாலின் ஆகியோர் நேர்மையானவர்கள். அறிவியலாளர்கள் நேர்மையானவர்கள். நேர்மையற்ற நபர்கள் யார்? ட்ராட்ஸ்கி, புகாரின், சென் டீயு-சீ, சாங் கோ-டா இவர்கள் முழுக்க முழுக்க நேர்மையற்ற நபர்கள். குழு அல்லது தனிநபர் அடிப்படையில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துபவர்கள் கூட நேர்மையற்ற நபர்கள்தான். தந்திரமான நபர்களும் தங்களை மதிப்பு மிக்கவர்களாக, புத்திசாலிகளாக அலங்காரப்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளில் அறிவியல் அணுகுமுறை கொண்டிராத அனைத்து நபர்களும், உண்மையில் ரொம்பவும் அயோக்கியர்கள். அவர்கள் எந்த நன்மைக்கும் உதவுவதில்லை . நமது கட்சிப் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்தச் சிக்கலில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியைக் கட்டியமைத்து, கொள்கையற்ற குழுச் சண்டைகள் அனைத்தையும் முழுமையாகத் துடைத்தெறிய வேண்டும். தனிநபர்வாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்ப்பதன் மூலம் நமது கட்சி முழுவதையும் ஒரு பொது இலட்சியத்திற்காக நடைபோட, போரிடத் தயார்படுத்த வேண்டும். (பக்கம் 30-32)

நூல் : நமது படிப்பை சீர்செய்வோம்
ஆசிரியர் : மா சே துங்

வெளியீடு : புது மலர்

பக்கங்கள்: 64
விலை: ரூ. 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க