ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

இந்தியாவில் ஜனநாயகம் சரிவடைந்து சர்வாதிகாரம் தலைதூக்குவதை நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்களில் இருந்தும் விளக்குகிறார் பேராசிரியர் முரளி

மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. மோடி அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராத ஊடகங்களாக சமூக வலைத்தளங்களும் (அதிலும் ட்ரோல் படையைக் கொண்டு மிரட்டி முடக்குகிறது) பண்பாட்டு ஊடகங்களாக ஓ.டி.டி தளங்களும் இருந்து வருகின்றன.

இந்தியாவை இந்துராஷ்டிரமாகத் துடிக்கும் சங்க பரிவாரத்திற்கு இந்த ஓ.டி.டி தளங்களும் சமூக வலைத்தளங்களும் புதிய தலைவலியாகியிருப்பதை ஒட்டியே அதனையும் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு.

இந்நிலையில் இந்தியாவில் பெயரளவிற்காவது இருந்துவந்த ஜனநாயக விழுமியங்கள் எல்லாம் என்னவாகின ? ஜனநாயகத்தின் முதுகெலும்பாக அறியப்படும் ஊடகங்கள் என்னவாகின ? அறிவுத்துறையினர், செயல்பாட்டாளர்கள் நிலை என்ன ?

இது குறித்து விரிவாக “ஜனநாயகம் சரிகிறதா?” என்ற தலைப்பில் 30 நிமிட காணொலியில் பேசியிருக்கிறார் பேராசிரியர் முரளி அவர்கள். அதில், இந்தியாவில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் மீது நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் சர்வதேச அளவில் இந்தியாவின் ஜனநாயக நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவது, கொல்லப்படுவது மற்றும் நேர்மையான ஊடகங்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுகின்றன என்பதையெல்லாம் விரிவாக விவரிக்கிறார்.

உலகளாவிய அளவில் ஒரு நாட்டில் ஜனநாயகம் சீரழிந்து போவதை அடையாளப்படுத்தும் 8 அளவுகோல்களைப் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் பேராசிரியர் முரளி. அவை,

1. ஜனநாயக விதிகள் மறுக்கப்படுதல்
2. எதிர்க் கட்சிகள், அரசியல் எதிரிகளின் உரிமைகள் மறுக்கப்படுதல்
3. வன்முறையைத் தூண்டுதல் / ஆதரித்தல்
4. குடிமை உரிமைகள் மறுப்பு
5. குடிமைச் சுதந்திரத்தை நசுக்கும் சக்திகளை ஆதரித்தல்
6. ஒரு குறிப்பிட்ட சாரரின் மாண்பை உதாசீனப்படுத்தி இழிவுபடுத்துதல்
7. இன அழிப்பிற்கு ஆதரவு தெரிவித்தல்
8. பன்மைத் தன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்

இவை அனைத்தும் இந்தியாவில் எந்த அளவிற்கு இன்று பரவலாகக் காணப்படுகின்றன என்பதை நாமே ஒப்பிட்டு இன்று இந்தியா எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள இந்தக் காணொலியைப் பாருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க