PP Letter headபத்திரிகைச் செய்தி

01.03.2021

பெண் மாவட்ட கண்காணிப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் இப்போது வரை கைது செய்யப்படவோ பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, காத்திருப்பு பட்டியலில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. ஆனந்த வெங்கடேஷ், இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, தனக்கு கீழே வேலை செய்த பெண் டி.எஸ்.பியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இந்த  ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் டிஜிபியாக உயர்ந்து இருக்கிறார் என்றால், இந்த கேடுகெட்ட அரசின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் எஸ்.பி-ஐ டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் கொடுக்க கூடாது என்று இன்னொரு மாவட்ட எஸ்.பி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் சாவியை எடுத்துக்கொண்டு தடுக்கிறார், மிரட்டுகிறார். பல உயர் அதிகாரிகளின் மிரட்டல்களை மீறித்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றி வருகிறார். இந்த லட்சணத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற விளம்பரம்  ஒரு வெட்கக்கேடு!

இப்பிரச்சினை எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெளிக் கொண்டு வரப்படவில்லை என்றால் அந்தப் பெண் எஸ்பியின் கதி என்ன?

ஏற்கெனவே, ஐ.ஜி முருகன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்தார் என்று சீனியர்  எஸ்.பி ஒருவர் அளித்த புகார் என்னவானது?

வாச்சாத்தி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிதம்பரம் பத்மினி வழக்கு, கோயம்பேட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு என போலீஸ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எண்ணி மாளாது. காவல் நிலைய கொட்டடிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் சொல்லி மாளாது.

ஒரு நாட்டின் குடிமகன் செய்கின்ற தவறுக்கு எப்படி சட்டப்படி தண்டிப்பதற்கு தடையேதும் இல்லையோ அதைப்போலவே அதிகார வர்க்கத்தினரும் தண்டிக்கப்பட வேண்டும்.  போலீசே,  போலீசின் தவறுகளை விசாரிக்க முடியும் என்ற திமிரின் காரணமாகத்தான் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கடும் சித்திரவதை செய்து கொன்று விட்டு அவர்கள் குடும்பத்தினரையும் சாட்சி சொல்லக் கூடாது என்று மிரட்டவும் முடிகிறது.

சுத்தமான நிலத்தடிநீர் வேண்டும், காற்று வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் முடிகிறது.

படிக்க :
♦ வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
♦ சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது போலீஸின் அக்கிரமங்களுக்கு முடிவுகட்டும் வகையில்   அனைத்து மக்களும் போராட முன்வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க