போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ்  சுட்டு கொன்றுள்ளது.

கைது நடவடிக்கையின் போது தவறுதலாக மின்சார துப்பாக்கிக்கு பதிலாக கைத்துப்பாக்கியினால் போலிஸ் அதிகாரி  சுட்டுவிட்டார் என்று வழக்கம் போல காவல்துறை ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறது. ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரியும் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் சென்று விட்டார்.

இடது : சுட்டு கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் டான்ட் ரைட், வலது : ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரி

அமெரிக்க போலீசுக்குள் இருக்கும் வெள்ளை நிறவெறி பயங்கரவாதத்திற்கு பலியான கருப்பின மக்கள் ஏராளம்.  2020-ம் ஆண்டு மே மாதத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட அதே மினியாபோலிஸ் நகரத்தில்தான் ரைட்டும் கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் படுகொலைக்கு எதிர்வினையாக அமெரிக்கா முழுதும் கடுமையாகப் போராட்டம் வெடித்தது.

அதற்கு இப்பொழுதுதான் வழக்கு விசாரணையே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புரூக்ளின் மைய மேயர் மைக் எலியட் டான்ட் ரைட்டிற்கு ‘உரிய நீதியை’ எப்படியும் பெற்றுத் தறுவதாக உறுதியளித்துள்ளார். ஆயினும் இந்த உறுதிமொழிகளை கருப்பின மக்கள் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கி விட்டனர்.

படிக்க :
♦ இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

 

மினசோட்டா, புரூக்ளின் செண்டரில் உள்ளூர் போலீசால் டுவான்ட் ரைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரால் குறிப்பிடப்படும் இடத்திற்கு அருகில் போலீஸ் அதிகாரியை ஒரு போராட்டக்காரர் எதிர்கொள்கிறார்.

 

டுவான்ட் ரைட் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே போராட்டக்காரார்கள் எதிர்ப்பை தெரிவிக்க கைகளை உயர்த்துகின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் டுவான்ட் ரைட்டை போலீசார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரர் போலிஸை எதிர்கொள்கிறார்.

 

மினியாபோலிஸின் வடமேற்கில் உள்ள புரூக்ளின் சென்டரில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் போலீசால் கொல்லப்பட்ட் 20 வயதான டான்டே ரைட்டின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஏறிச் செல்வதற்கு முன்பாக அவரை போலீசார் சுட்டதாகவும் பின்னர் அவர் இறந்து போனதாக செய்தி கிடைத்து என்று குழுமியிருக்கும் கூட்டத்திடம் ரைட்டின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

டான்டே ரைட்டை புரூக்ளின் செண்டர் போலிஸ் சுட்டுக்கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் போலிஸ் வண்டியின் முன் கண்ணாடியின் மீது கோபமாக ஒருவர் ஏறுகிறார்.

 

புரூக்ளின் செண்டர் துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகாரியை விசாரிப்பதாக” மினசோட்டா குற்றவியல் புலனாய்வு பணியகம் கூறியது. ஆனால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண மறுத்து விட்டது.

 

புரூக்ளின் செண்டரில் போராட்டக்கரார்கள் மற்றும் போலீசாருடனான மோதலில் ரப்பர் குண்டினால் சுடப்பட்ட ஒருவரை மக்கள் கவனிக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டர் காவல் துறை அலுவலகத்திற்கு வெளியே காவல் பணியில் ஒரு போலீஸ் அதிகாரி.

 

புரூக்ளின் செண்டர் காவல் நிலையம் முன்பாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகைமூட்டத்திற்கிடையில் போலீஸ் அதிகாரிகள்.

 

புரூக்ளின் சென்டர் காவல் நிலையம் முன்பு போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளிடம் இருந்து தப்ப, மக்கள் பாதுகாப்பு உடை உடுத்தியிருக்கின்றனர்.

தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க