வேண்டாம் ஸ்டெர்லைட்

கொரோனா தீவிரமாக பரவிவரும் சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் இறப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நான் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்று கூறுகிறது வேந்தாந்த நிறுவனம். தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை அழித்தது ஸ்டெர்லைட் ஆலை. பல்வேறு மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தியது, விவசாயத்தை அழித்தது, நிலத்தடி நீரை நாசமாக்கியது ஸ்டெர்லைட் ஆலை. 13 உயிர்களை போலீசின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி கொடுத்து கடும் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்த நாசகார ஸ்டெர்லைட் மூடயிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்கிறது வேதாந்தா. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு – உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.

ஆக்சிஜன் உற்பத்தியின் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க ஏற்பாடு

கொரோனா வந்தா நாங்கதான் அழிவோம்;
வேதாந்தா வந்தா எங்க தலைமுறையே அழிஞ்சிடும்…!


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க