பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள்…!

கொரோனா பெறும் தொற்றில் இந்தியாவில் மக்கள் அனைவரும் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா தடுப்பு மருந்துகளை கார்ப்பரேட்டுக்கள் விற்று இலாபமீட்ட வழிவகை செய்கிறது மோடி அரசு.

ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் பிழைக்க முடியாத ஏழை மக்கள் தினம் தினம் தினம் மருத்துவ வசதிகள் இன்றி இறக்கிறார்கள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.

கொரோனா அச்சத்தை பயன்படுத்திக்கொண்டு, தடுப்பு மருந்துகளை தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு திற்ந்துவிட்டு கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க