ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி

ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் பிரான்சில் அம்பலமாகி விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், இந்தியாவில் இந்த ஊழல் முறைகேடு அடக்கி வாசிக்கப்படுகிறது. ரஃபேல் ஊழல் குறித்த பார்வையை வழங்குகிறார் சுரேசு சக்தி முருகன்

ஃபேல் ஊழல் பற்றிய விசாரணையை பிரான்ஸ் அரசு தற்போது துவங்கியுள்ளது. அந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை துவங்கியது. ஆனால் இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்திய அரசு மற்றும் அனில் அம்பானியின் மீது கடுமையான குற்றச்சாட்டோ கூட இந்தியாவில் வைக்கப்படவில்லை.  இந்தியாவில் இப்படிப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடு மக்கள் மத்தியில் ஏன் போராட்டத் தீயைப் பற்ற வைக்கவில்லை?

இந்தக் கேள்விக்கான பதிலையும் ரஃபேல் ஊழல் நடைபெற்ற முறையையும் குறித்து விவரிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன். ரஃபேல் ஊழலில் இதுவரை நடந்தவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு காணொலிகளாக இங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஊழல் : விசாரணையை துவக்கிய பிரான்ஸ் !

ரஃபேல் ஊழல் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பிரான்ஸ் ஊடகங்கள் பேசத் துவங்கிவிட்டன. அங்கு இந்த ஊழலை பற்றிய பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ரஃபேல் ஒப்பந்தம் செய்து கொண்டபோது இருந்த அதிபர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்த உள்ளது பிரான்ஸ்.

000

ரஃபேல் ஊழல் : மோடி – அம்பானி பங்கு என்ன ?

ரஃபேல் ஊழலில் இந்தியாவின் பங்கு குறிந்து தற்போது மிகவும் சொற்பமாகவே இந்தியாவில் பேசப்படுகிறது. அதிகமான ஆதாரங்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக ஈடுபட்ட மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சரைக் கூட கலந்தாலோசிக்காமல் அனில் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்று இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

000

ரஃபேல் ஊழல் : இந்தியாவில் குற்ற விசாரணை அவசியம் – ஏன் ?

மோடி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று இந்த ரஃபேல் ஒப்பந்த ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் போடப்ப்பட்ட ஓப்பந்த விலையை விட ஒரு விமானத்தின் விலையை 3 மடங்காக அதிகரித்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.-ஐ பின்புலமாகக் கொண்ட பாஜக அரசு. இது மாபெரும் ஊழல் என்பதோடு, தேசிய பாதுகாப்பையே அடகு வைத்த ஒப்பந்தமாகும். பிரான்ஸ் அரசின் ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணை போல இந்தியாவிலும் ரஃபேல் தொடர்பான குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்

000

ரஃபேல் ஊழல் : எதிர்கட்சிகள், ஊடகங்கள் அமைதி காப்பது ஏன்?

மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் இந்த ஊழலை பற்றி பேசியே ஓட்டுக்கேட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க-வும் இந்த ஊழலைப்பற்றி பேசியது. ஆனால் தற்போது காங்கிரசில் ஒரு சிலரைத்தவிர பல ஓட்டுக் கட்சிகளும் மௌனம் காக்கின்றன. ஊடகங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுடையது என்பதால், ரஃபேல் ஊழல் விவகாரத்தை பேச மறுக்கிறது. ஆனால் மக்களாகிய நாம், ஊழல் மூலமாக பறிக்கப்பட்ட நம் பணத்தை மீட்டெடுக்க என்ன செய்யப் போகிறோம்.

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க