காவிரியின் குறுக்கே மேகதாது அணை – தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை
தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடகம் – பாஜக – கார்ப்பரேட் கூட்டுச் சதியை முறியடிப்போம் !
மேகேதாட்டு பகுதியில் ரூ. 9,000 கோடி செலவில் அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றது கர்நாடக அரசு. இந்த அணையின் மூலம் 4.75 டிஎம்சி தண்ணீரை குழாய் வழியாக பெங்களூருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.
மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாக காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதை உடனடியாக கர்நாடக அரசு கைவிட வேண்டும். கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்ட வேண்டும் என கொக்கரிக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கள்ள மவுனம் சாதிக்கிறது.
இதனை அம்பலப்படுத்தி தருமபுரி மக்கள் அதிகாரம் சார்பாக மேட்டூர் அணை நீர்தேக்கம் பகுதியான நாகமரை மற்றும் ஏரியூர் போன்ற இடங்களில் பென்னாகரம் வட்டார ஒருங்கிணைப்பு குழு தோழர்களால் ஜூலை 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
9790138614