ருமபுரி எர்ரப்பட்டியில் இரவோடு இரவாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஆயிரக்கணக்கில் குழாய்களை குவித்து வைத்துள்ளது கெயில் நிறுவனம்.

ஆட்சிகள் மாறினாலும் விவசாயிகளின் துயரங்கள் மாறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயிகளின் போராட்டத்தை என்றுமே மதித்து நடப்பதில்லை.

கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் சாலை ஓரமாக குழாய்களை பதிக்கும் போது தமிழகத்தில் மட்டும் விவசாய நிலத்தில் பதிக்கப்படுவது ஏன்? என்ற விவசாயிகளின் கேள்விக்கு பதில் இல்லை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !
♦ விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை

இந்த குழாய் பதிப்பு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்க்கையும் பறிபோகிறது. சாலை ஓரமாக கொண்டு சென்றால் விவசாய நிலங்கள் பாதிக்காது என்ற கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ள ஆட்சியாளர்கள் மறுப்பது ஏன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் இரவோடு இரவாக, ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021(இன்று) காலை 10 மணிக்கு ஏர்ரப்பட்டியில் குவிந்தனர்.

This slideshow requires JavaScript.

முறையான பேச்சுவார்த்தையோ, உரிய பதிலோ அரசு தரப்பில் கொடுக்கப்படாத பட்சத்தில், விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் அதிகாரத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து காத்திருப்புப் போராட்டத்தில் உடன் கலந்துக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க