மேக்கேதாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை தகர்த்தெறிவோம் ! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்குவோம் !!!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் வருகின்ற 30.8.2021 அன்று அஞ்செட்டி தமிழக எல்லையில் இருந்து மேக்கேதாட்டு நோக்கி மக்கள் அதிகாரம் சார்பாக நடைபயணம் நடைபெற உள்ளது. தருமபுரி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, மக்கள் அதிகாரம்.
படிக்க :
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
குறிப்பாக தமிழக எல்லை பகுதிகளான அஞ்செட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கிராமப்புற மக்களை சந்திப்பது, தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, வட்டார நகரங்களில் கடைவீதி பிரச்சாரம் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு அறை கூவல் விடுத்து வருகிறது மக்கள் அதிகாரம்.
அதன்படி நாட்றாம்பாளையம் கேரட்டியில் 26.8.2021 அன்று மாலை 3 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் இப்போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். இதே போல் நாட்றாம்பாளையம் கடைவீதியில் தோழர் துரை தலைமையில் பிரச்சாரம், பென்னாகரம் கடைவீதியில் தோழர் சிவா தலைமையில் பிரச்சாரம், கேரட்டியில் தோழர் கனகராஜ் தலைமையில் பிரச்சாரங்கள் நடைப்பெற்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க