மேக்கேத்தாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை முறியடிப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரழுச்சியை உருவாக்குவோம்!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021 – அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் பேரணி – ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தில் அஞ்செட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக தோழர் சத்தியநாதன் மாவட்ட அமைப்பாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மற்றும் தோழர் சங்கர், மாநில ஒருங்கிணைப்பு குழு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஓசூர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேருந்து நிலையத்திலிருந்து மேக்கேதாட்டு நோக்கி பறையிசை முழங்க நடைபயணம் தொடங்கியது. இதனைக் காண கடைவீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடக்குமிடத்திற்கு அருகில் குழுமினர். மேக்கேத்தாட்டு நோக்கி நடைபயணத்திற்கு போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையிலும் தடையை மீறி பேரணி செல்ல பெண்கள் குழந்தைகளோடு சென்றனர்.
படிக்க :
மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசுத்துறை தடுப்புகளை அமைத்து தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்தது. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைதாகினர். குழந்தைகளை கைது செய்து வண்டியில் ஏற்ற மறுத்தது போலீசு. குழந்தைகளை எங்களோடு அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை என்றால் போராட்டத்தின் தன்மை மாறும் என்று முழுக்கமிட்ட பிறகு, திருமண மண்டபம் வரை அழைத்து வந்தனர். பிறகு மண்டபத்தில் குழந்தைகளை விட மறுத்தனர். அங்கும் போலீசை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மண்டபத்தில் வெளியே இருந்தவாரே கையொப்பம் பெற்று விடுதலை செய்தனர்.
இப்போராட்டம் மூலம் எடுக்கப்பட்ட பிரச்சாரங்களால் பகுதி மக்களிடையே மேக்கேதாட்டு அணை குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்து காலை முதலே அஞ்செட்டி கடைவீதி பகுதிகளில் பரபரப்பை ஏற்பதுத்தியது போலீசு. இதனையடுத்து மக்கள் அதிகாரம் தோழர்கள் பறையடித்து முழக்கமிட்டுக் கொண்டு பேரணியாக வந்தது பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கர்நாடக மக்களிடம் இனவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்திற்காக மேக்கேதாட்டு  அணை கட்ட முயற்சித்து வருகிறது. மற்றொருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தண்ணீர் வினியோகத்தை ஒப்படைப்பதற்கான ஒரு பகுதியாக  மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி, ஓட்டுக் கட்சிகளின் பின்னால் சென்று பிரச்சினையை தீர்க்க முடியாது. தமிழகத்தில் ஓர் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மக்களுக்கு அறைகூவல் விடுத்து நடத்திய இந்த நடைபயண போராட்டம் பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

This slideshow requires JavaScript.

மேக்கேதாட்டு-வில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்கிற வகையில் தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு தடை இருக்கக் கூடாது. இதன்மூலம் தமிழக மக்களிடம் ஒரு பேரெழுச்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.

9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க