கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து எழுதிய கடிதங்கள், பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதழுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
செப்டம்பர் மாதம் முதலாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ள புதிய ஜனநாயகம் இதழுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. பு.ஜ.வின் பல வாசகர்கள் மின்னிதழாகவும் அச்சிதழாகவும் பு.ஜ.வைப் பார்த்து மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் பலரும் தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளனர்.
பு.ஜ. கட்டுரைகள் சிறப்பாக இருந்ததாகவும் நடப்பு அரசியல் போக்குகளின் மேல் சரியான கண்ணோட்டத்தைக் கொடுக்க கூடிய வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒசூரைச் சேர்ந்த இனியன் என்கிற தோழர் அனைத்து கட்டுரைகள் மீதும் தனது விரிவான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து வரவேண்டிய கட்டுரைகள் குறித்து சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் தலையங்கக் கட்டுரை குறித்து, ‘‘…அங்குலம் அங்குலமாக நாடாளுமன்றத்தில் நடந்த கூத்தை பட்டியலிட்டு நினைவூட்டி செல்கிறது, கட்டுரை. நாடாளுமன்றம் அதன் சொல்லப்பட்ட உரிமைகளைக் கூட இழந்து விட்டதை படம் பிடித்து காட்டுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
‘‘சி.பி.ஐ.(எம்.எல்.)(ரெட் ஸ்டார்)’’ குழுவின் தோழர்கள் பு.ஜ.வைப் பார்த்து பெரு மகிழ்ச்சியுடன் வாங்கியுள்ளனர். தொடர்ந்து தங்களது தோழர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ம.ஜ.இ.க.வில் இருந்து பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்படுகின்ற பல தோழர்கள் பு.ஜ.வை மீண்டும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் ‘‘மக்கள் அதிகாரம்’’ சார்பாக செப்டம்பர் 1−ம் தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய, ‘‘தமிழ் புலிகள்’’ அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், ‘‘புதிய அரசியல் விசயங்கள், போக்குகள் குறித்து கற்றுக்கொள்வதற்கு புதிய ஜனநாயகம் உதவியாக இருக்கிறது. இது புதிய ஜனநாயகத்தின் பங்களிப்பு. அதனை மீண்டும் கொண்டு வந்ததற்கு எமது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஆளூர் ஷாநவாஸ் பு.ஜ.வைப் பெற்றுக்கொண்டு இதழ் மீண்டும் வருவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தோழர்கள் பலரும் வரவேற்று இதழைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பல கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பு.ஜ.வைப் பார்த்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
பு.ஜ. தொடர்ந்து வெளிவருவதால் கடைகளில் விற்பனைக்கு இதழை கொடுக்குமாறு சில புத்தகக் கடை உரிமையாளர்கள் நமது தோழர்களிடம் கோரியுள்ளனர்.
மொத்தத்தில், பு.ஜ.வின் வருகையானது கலைப்புவாதிகளைத் தவிர முற்போக்கு, புரட்சிகர, ஜனநாயக அரசியல் சக்திகள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
− நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561 மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம், Bank: SBI, Branch: Kodambakkam, Account Name: PUTHIYA JANANAYAGAM, Account No: 10710430715, IFS Code: SBIN0001444.
தேசிய பணமயமாக்கல் திட்டம் : மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு!
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
தலையங்கம்உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர் தோழர், சுதேசி இயக்கத்தின் முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் : மறுகாலனியாக்கத்தையும் இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிக்க சூளுரைப்போம்!
தமிழகத்தைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
தேசிய பணமயமாக்கல் திட்டம்: மறுகாலனியாக்கத்தின் உச்சக்கட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு !
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு : தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !
ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல்
கொடநாடு கொலை – கொள்ளை : விவாதப் பொருளாக வேண்டியது எது?
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை : நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்
பத்திரிகைச் செய்தி : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !
உத்திரப்பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்
திரிபுராவில் இந்து மதவெறி குண்டர்களின் வெறியாட்டம்! தேவை : பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் போராட்டங்களும்!