திர்வரும் டிசம்பர் மாதம் முதல் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஏற்ப வாகனங்களை மாடுகளுக்கான ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளைத் துவக்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் !

கொரோனாவில் மொத்த மாநிலமே கதிகலங்கி நின்றது. மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டு பற்றாக்குறை, கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்தது, கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட கொரோனா சடலங்கள் என உத்தரப் பிரதேசத்தின் மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை கொரோனா அம்பலப்படுத்தியது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களை எடுத்துச் செல்ல வண்டியில்லாமல் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட நிலைமையை சீர்படுத்துவது குறித்து எதுவும் பேசாத யோகி, மாடுகளுக்கு  ஆம்புலன்ஸ் தருகிறார்.

இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!

கருத்துப்படம் :

கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க