PP Letter head
தேதி : 30.11.2021
எழுவர் விடுதலையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையும்
சாத்தியம் ஆக்கப்பட வேண்டும்!
பத்திரிகை செய்தி
தி.மு.க.வின் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், எழுவர் விடுதலையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுவிப்பதாக சொல்லப்பட்ட கைதிகளின் பெயர் பட்டியலில் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய கைதிகளும் இடம்பெறவில்லை.
தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தி எழுவர் விடுதலைக்காக தமிழக மேற்கொண்ட போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கிய ஜெயலலிதாவையே எழுவர் விடுதலை குறித்த சட்ட மன்றத் தீர்மானம் இயற்ற வைத்ததும் மக்கள் போராட்டங்கள் தான்.
படிக்க :
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்
எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்
மிகச்சிறிய வயதில் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை என்ற பெயரிலேயே  அழைத்துச்செல்லப்பட்ட இஸ்லாமியர்கள் பலர். அவர்கள் மீதான வழக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளது. தண்டனை வழங்கப்படாமலேயே இத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமை உலகத்தில் வேறு எங்கேயாவது நடைபெற்று இருக்குமா?
பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியதாலும் மோடி எதிர்ப்பு அலையாலும் வென்ற தி.மு.க. அரசுக்கு, எழுவர் விடுதலையையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையையும் சாத்தியமாக்குவதற்கான எல்லா உரிமையும் பெற்றிருக்கிறது. எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியான ஒன்றாகும்.
இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் கைது செய்யப்படுவது அராஜகமான நடவடிக்கையாகும். உடனே தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு தவறும்பட்சத்தில் எழுவரின் விடுதலைக்காகவும் இஸ்லாமியர்களின் விடுதலைக்காகவும் தமிழகம் மீண்டும் போர்க்களம் ஆகும். அதைத் தவிர்க்கவே முடியாது.

தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல்செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க