PP Letter head
19.01.2022
பத்திரிகை செய்தி
முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது சென்னை மண்டல மாநாடு 19.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை மண்டலக் குழுவிற்கான தேர்தல் முறைப்படி நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலச் செயலாளராக தோழர் அமிர்தா, சென்னை மண்டல இணைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், சென்னை மண்டலப் பொருளாளராக தோழர் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேத்துபட்டு கிளைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், சைதாப்பேட்டை கிளைச் செயலாளராக தோழர் பூர்ணிமா, காஞ்சிபுரம் கிளைச் செயலாளராக தோழர் ஏழுமலையான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,
தோழர் அமிர்தா
சென்னை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க