உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ய இந்துமதவெறி குண்டர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதேபோன்ற அழைப்பை விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 20 அன்று இரவு ஹிவமோக்காவில் ஒரு கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட ஹர்ஷாவுக்கு நீதி கோரி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அடுத்த நாள் மாவட்டம் முழுவதும் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் பதிவாகின. அதில், முஸ்லீம் பகுதிகளை சேதப்படுத்தி வாகனங்களுக்கு தீ வைத்தது இந்துத்துவக் கும்பல். அவரது மரணம் தொடர்பாக இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 25 அன்று சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில், பஜ்ரங் தளத்தின் உறுப்பினரான பூஜா (19 வயது), விஜயபுராவில் பஜ்ரங் தள்-ஐச் சேர்ந்த ஹர்ஷாவின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம் மக்களை கொலை செய்ய அழைப்பு விடுத்துப் பேசியுள்ளார்.
படிக்க :
♦ ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
♦ முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
“தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்போம்; பால் கேட்டால் மோர் கொடுப்போம்; ஆனால், இந்தியா முழுவதும் ஹிஜாப் வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் (முஸ்லீம்கள்) சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
‘காவி இந்தியா’வில் செய்யப்பட்ட அனைத்து கைதுகளுக்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், அது போதாது. உங்களால் (அரசாங்கத்தால்) செய்ய முடியாவிட்டால் எங்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் கொடுங்கள் ஹிஜாப் அணிந்த 6 மாணவிகளை மட்டுமல்ல ஹிஜாப் அணிந்த 60,000 பேரையும் துண்டு துண்டாக வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
விஜயபுரா பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஸ்ரீநாத் பூஜாரி சங்கப்பா பூஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் “இந்த வகையான வெறுப்பு பேச்சு சரியானது அல்ல. உன்னை வெட்டுவோம்; கொல்வோம் என்ற இப்படிப்பட்ட பேச்சுக்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.
After Genocidal call in Haridwar in December 2021, Here's one more open call for Muslim Genocide in Karnataka by Right Wing group after #HijabRow @DgpKarnataka @BSBommai @siddaramaiah @DKShivakumar pic.twitter.com/ZlhFW8eGMc
— Mohammed Zubair (@zoo_bear) February 25, 2022