தில்லை கோவிலில் தமிழுக்கு அனுமதி மறுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது தாக்குதல் தொடுத்த பார்ப்பன தீட்சிதக் கும்பலை கைதுசெய்து, தில்லை கோவிலில் நந்தன் நுழைந்த வாயிலை அடைத்து எழுப்பப்பட்டிருக்கும் சுவரை இடிக்க வேண்டி வலியுறுத்தி, 11.03.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக புரட்சிகர அமைப்புகள் கலந்துகொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள், தில்லை தீட்சிதர்களின் பொய்களையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை விரித்துரைத்தார். அவரது உரையின் முழுமையான காணொலியை இங்கு காணலாம் !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க