பெண்களுக்கான கொள்கையா? அல்லது பெண்கள் அல்லாத கொள்கையா?
(Public policy) பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி?
முக்கிய முடிவெடுக்கும் பாத்திரங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகளில், எத்தனை பெண்கள் பங்கேற்கிறார்கள் என்பதை கொண்டுதான் பாலின பிரிதிநிதிகள் நிறுவனங்களை நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம்.
இந்தியாவில் பிரிதிநிதித்துவம் பற்றிய முயற்சிகள் எடுத்தாலும் கொள்கை வகுப்பதில் பெரும்பாலும் பெண்கள் இடம்பெறுவது இல்லை என்பதை நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தரவு சுட்டிக்காட்டுகிறது. பாலின ஊதிய இடைவெளி, தாய்வழி சுகாதாரம் மற்றும் சட்டமன்றத்தில் பாலின வன்முறை போன்ற பெண்களின் பிரச்சினைகளுக்கு  முக்கியத்தும்  இல்லாதை இது சுட்டிக்காட்டுகிறது.
இதில் கூடுதலாக, பொதுக் கொள்கையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது. இவற்றில் முக்கிய முடிவெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பெண்களின் பங்கேற்பு அவர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கப்படுகிறது. ஓரு சிறந்த பிரதிநிதித்துவத்தின் அளவுகோலாக எவ்வளவு பேர் அதில் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறார்கள் என்பதை கொண்டுதான்  செயல்படுகிறது.
படிக்க :
♦ பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா
♦ ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த, பொதுக் கொள்கையில் பெண்களைச் சார்ந்த உரையாடல்கள் அவர்களை சமமாக அங்கீகரிப்பதில் தொடங்க வேண்டும். அப்படி பங்கு பெறுபவர்கள் பற்றிய புரிதல் அவற்றை முடிவெடுப்பவர்களைத் தாண்டி முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டும். பெண்களுக்கான கொள்கைகள் பெண்கள் இல்லாமல்  செயல்பட்டால் அது சாத்தியமற்று போகும்.
பெண்களுக்கான நிறுவனங்கள் மற்றும் பெண்கள் இல்லாத நிறுவனங்களின் தற்போதைய நிலை
சமீபத்திய பொதுத் தேர்தல்களில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15 சதவீதம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 2021 யூனியன் கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்களின் விரிவாக்கத்தில் கடந்த 17 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் எம்.பி.க்களை அவையில் இடம்பெற்று இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை குறைவே. மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 78 பெண்களில்  11 பேர் மட்டுமே அமைச்சராக உள்ளனர்.
2022-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ்களில் நியமனம் செய்த மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 685 நபர்களில் 177 பெண்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதாவது இது மொத்த சதவீதத்தில் 26% என தெரிவிக்கிறது தரவு புள்ளி. இதில் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகமான பெண்கள் நிர்வாகப் பிரிவில் நுழைந்தாலும், நாடு முழுவதும் மேல் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் தளத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும்  நபர்களின் எண்ணிக்கையை கடந்து பிரநிதிதுவத்தின் முக்கியதும்தான் என்பதை பகுப்பாய்வு வேண்டும். இது பாலின பாகுப்பாட்டை சமன்படுத்த உதவும்.
“அரசியல், பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் முக்கிய முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் பெண்களின் முழு ஈடுப்பாட்டையும, பயனுள்ள பங்கேற்பையும் தலைமைத்துவத்திற்கான சம வாய்ப்புகளையும் உறுதி செய்ய” பாலின சமத்துவம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறைந்தது 5.5 ஆக இருக்க வேண்டும் என்கிறது. இவை பாலின சமத்துவத்திற்கான மாற்றத்தை நிறுவன முடிவெடுப்பதில் பெண்கள் பங்கேற்பதன் அவசியத்தை இந்த இலக்கு அங்கீகரிக்க உதவும் என்கிறது.
இந்த பரிந்துரையை UN-இன் SDG 5.5 குறியீட்டுடன் சுட்டிக்காட்டுகிறது. இதனால் வலுவான விவாதங்கள் குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டையுடன் எடுத்துகாட்டுகிறது. ஒதுக்கீடுயின்றி பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்காது என்று சிலர் உறுதியாக நம்பினாலும், சமூக சமத்துவமின்மை மற்றும் பாலின பாகுபாடுகளை வெறும் ஒதுக்கீட்டை மட்டும் வைத்து கொண்டு வழங்கிட முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
தேசிய நாடாளுமன்றம் (National Parliament) அல்லது துணை-தேசியத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பெற்றிருக்கும் பதவி, பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளை மதிப்பிடுவது  என்பதை அந்தந்த பகுதி மக்கள் தொகையை கொண்டே நிர்ணயிக்கப்படும் என்கிறது. இந்த குறியீடுகள் மற்றும் தீர்வுகள் முதன்மையாக எடுத்து கொண்டாலும் கூட இவை சரியானதா என மற்றொரு கேள்வியையும் முன் வைக்கிறது. ஏன் என்றால் நமது தேசிய புள்ளிவிவரங்களின் தரவு இதை வேறுவிதமாக கையாள்கிறது. இந்நிலையில் பெண்கள் சார்ந்த நிறுவன கொள்கை முடிவுகள் பற்றிய விவாதம் மிகவும் கவனிக்கதக்கது.
கடந்த 10 ஆண்டுக்கு மேலாக, இந்திய சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக வந்து இருக்க வேண்டிய மசோதா வராமல்போனது. ஆனால், அதற்காக தொடர்ந்த 10 ஆண்டு காத்திருப்புக்கு பின், 2008-ஆம் ஆண்டு லோக்சபா திருத்த மசோதா (Amendment) மற்றும் மாநில சட்டசபைகளில் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வேண்டும். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கவும் எனவும் அறவிக்கப்பட்டது.
மசோதாவின் நோக்கங்களில் கூறப்பட்ட அப்போதைய சட்டம் மற்றும் சமூக நீதி அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் வலியுறுத்தியபடி, இந்த மசோதா பெண்களுக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் அளிக்க முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையை வழி மொழிந்தார்.
அதன் பிறகு 2009-இல் சிறப்பாக நியமிக்கப்பட்ட நிலைக்குழுவால் மசோதா மீதான கூடுதல் விவாதங்கள் புதிய நுணுக்கங்களைக் கொண்டு வந்தன. வெவ்வேறு தொகுதிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதியில் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. கூடுதலாக, விளிம்புநிலைப் பெண்களுக்கு என ஒதுக்கப்படும் இடங்களும் கூறப்பட்ட சமூகக் குழுவில் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதன் பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா (108-வது திருத்தமசோதா) மார்ச் 9, 2010, இந்திய நாடாளுமன்றத்திலிருந்து நிலுவையில் இருக்கிறது. மக்களவை மற்றும் பெண்களுக்கான அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இடங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் ஒருமுறை மட்டுமே இடம் ஒதுக்கப்படும் வகையில் சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படும்.
“ஆண்கள் பொது விவாதங்களில் பெண்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள், ஆனால் இந்த ஆண் அரசியல்வாதிகள் பெண்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்பது இன்னுமும் கூட கேள்விகுறியே”
பெண்களுக்கான கொள்கை, கொள்கைகாக பெண்களா?
ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று, சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்க வேண்டும் என்று அழைப்பு மீண்டும் மீண்டும் விடுக்கப்படுகிறது. கொள்கை வகுப்பதில் பாலினத்தின் பங்கை நிவர்த்தி செய்வதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாகக் கூற,  இத்தகைய தரவுகளால் ஊர்த்திப்படுத்துகிறது.
உலகம் முழுவதும், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50%, பொது அலுவலகங்களில் பெண்கள் 22.5% மட்டுமே உள்ளனர்.
நாடாளுமன்றத்துக்கு இடையேயான பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் பார்லிமென்டரி யூனியன் தொகுத்துள்ள தரவுகளைப் பார்த்தால், இந்தியா – 11.8% என்கிறது ஆய்வு. உலக 193 நாடுகள் பங்கேற்ற இந்த ஆய்வில் இந்தியா 148-வது இடத்தில் உள்ளது என்கிறது ( Inter Parlimentary Union IPU).  பொலிவியா, கியூபா மற்றும் ருவாண்டா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே 50% பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14%-க்கும் அதிகமாக உள்ளது என்ற உண்மை இருந்தபோதிலும், இது சர்வதேச சராசரியான 22% ஐ விட இன்னும் குறைவாகவே உள்ளது.
படிக்க :
♦ நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
♦ பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
நாட்டின் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் திறம்பட சட்டமாக்க வேண்டும்.
இரண்டாவதாக, நிறுவனங்கள் பிரிவு 149 சட்டத்தின்கீழ் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்களை சேர்க்க வேண்டும். இது இப்படி இருக்க மற்றொரு பக்கம், டெலாய்ட்டின் (DeloIitte) சமீபத்திய ஆய்வில், 12% பெண்கள் மட்டுமே பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
நாட்டின் இறுதியாக, பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW), இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைப் பங்கு வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பானது, வளர்ச்சித் துறை, தனியார் துறை, பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் பிராந்தியங்களில் உள்ள பெண்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். பாலின சமத்துவம் தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உண்மையான பிரதிநிதித்துவ உச்ச அமைப்பாக இது செயல்பட வேண்டும். பாலின சட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறந்த சர்வதேச நடைமுறைகளைப் படிப்பதில் முன்னணி வகிக்கவும் NCW பணிபுரிய வேண்டும்.
அரசியல்  சுழலில் பெண்களின் பிரச்சினைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆக, பெண்களான கொள்கை முடிவுகளில் பெண்கள் மற்றும் சிறுபாண்மையினர் இல்லாமல் கொள்கைகளை வகுத்தால் அது பயனற்று போவதுடன் எந்தவித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதும் தெரிய வருகிறது. ஆக, பெண்களை பிரதிநிதித்துவத்தை தொடர்ந்த எல்லா இடங்களில் பெண்கள் பேச தொடங்குவோம் மாற்றத்தை முன்னெடுப்போம்.
சிந்துஜா
சமூக ஆர்வலர்.
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க