விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ – அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்ளாததன் விளைவே இதுபோன்ற மரணத்திற்கு காரணம்.
இதுபோன்ற செயல்களை தடுக்க ஊர், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் உழைக்கும் மக்களை கொண்ட படை கட்டி அடித்து உதைத்து விரட்டியடிப்பது ஒன்றே தீர்வு.
மேலும்..
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
