இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!

பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது.

மாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிர மழைப்பொழிவும் பெருவெள்ளமும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான ஆலங்கட்டி மழையும், அதன்பிறகான மழை வெள்ளமும் ஆப்பிள் விளைச்சலை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக 1100 விழுக்காடு கூடுதலான மழைப்பொழிவைப் பெற்றிருக்கிறது. அதேபோல் பஞ்சாபின் 12 மாவட்டங்களில் 1100 விழுக்காடு முதல் 7600 விழுக்காடு வரையில் கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. முன்னதாக 2021-இல் உத்தரகாண்ட் மாநிலம் பேரழிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வடமாநிலங்களில் இது போன்ற பேரழிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உலகம் அதிர்ச்சியுற பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு இது குறித்த ஆய்வில் சர்வதேச ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற பேரழிவுகளுக்கும் இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகி வருவதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர்.


படிக்க: ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?


இமயமலை மற்றும் இந்துகுஷ் வட்டாரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. அவற்றில் 30 மட்டுமே உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் இளம் மலைத்தொடரான இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகிக் கொண்டிருப்பதானது பேரபாயம் மிக்கதாக உள்ளது.  புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

2009-அம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 127 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு செயற்கைக்கோள் வெளியிட்ட படங்களை ஆய்வு செய்த சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது. இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவது தற்போது தொடர் நிகழ்வாகிவிட்டது.

பனிப்பாறைகள் உருகுவது பற்றி இந்திய அரசு நிறுவனங்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று கடுமையாக ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.


படிக்க: அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !


மூத்த பனிப்பாறை நிபுணரான டாக்டர் டி.பி. டோபல் “நாங்கள் 2009-இல் பனிப்பாறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு மையத்தைத் தொடங்கினோம். இதை இந்திய பனிப்பாறைகள் தேசிய மையமாக உருவாக்கவும் திட்டமிடப்படிருந்தது. இது நடக்காததால் பனிப்பாறை குறித்த ஆய்வு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

அதேபோல் இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ், எட்டு தேசிய பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று “இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பது”. அதன் நோக்கம் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் பனிப்பாறைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றின் தற்போதைய  ஆரோக்கியத்தை மதிப்பிடுவதும், தரவுகளை உருவாக்குவதும், புதிய முறைகளைப் பின்பற்றுவதும்” ஆகும்.

ஆனால், பாசிச மோடி அரசோ இமயமலையின் தற்போதைய ஆபத்தான  நிலைமை குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இரத்தம் குடிக்கும் ஓநாயைப் போல காவி கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நாடு முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது; அதானி – அம்பானிகளுக்காக சேவை செய்து வருகிறது.

புவி வெப்பமடைதல் எனும் உலகளாவிய பிரச்சினையின் அங்கமே இமயமலை பனிப்பாறைகள் உருகுவதாகும். ஏகாதிபத்தியத்தின் இலாபவெறியானது புவி வெப்பமடைதலை பாய்ச்சல் வேகத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதைக் கேள்வியெழுப்பாமல் சுற்றுச்சூழல் பேரழிவை ஒரு அங்குலம் கூட தடுத்து நிறுத்த முடியாது.


அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க