மனதை உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம்
பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 3.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மலைகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு மீட்புப்படையினர் செல்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தை இந்த துயரக்காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.










நன்றி: அல்ஜசீரா