டந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனியர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

ஹமாஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று கொலைகார இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக காசா இருளில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், காசாவிலிருந்து வெளியாகும் கீழ்க்கண்ட புகைப்படங்கள் காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்களின் மோசமான நிலைமையையும் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் ஏகாதிபத்தியங்களின் இரத்தவெறியையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஹமாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சிறுமியை காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சி.
காசா நகரில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவருக்கு துக்கம் அனுசரிக்கும் உறவினர்.
காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஒரு குழந்தையை உறவினர் அடக்கம் செய்யும் காட்சி.
அக்டோபர் 10 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இடிந்த குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு இளம் பெண்ணை பாலஸ்தீனியர்கள் மீட்ட புகைப்படம்.

காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே குண்டுகள் விழுந்ததால் அச்சத்தில் மிரண்டு ஓடும் குழந்தைகள்.
வீடுகளை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள்.
காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் பள்ளி ஒன்றில் வான்வழித் தாக்குதல்களின் சத்தத்தைக் கேட்டு வானத்தைப் பார்க்கும் பாலஸ்தீனிய குழந்தைகள்.
காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படை.
இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் தகர்க்கப்பட்டுள்ள காசா பகுதிகள்.