துவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் கொல்லப்பட்டுள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இஸ்ரேலின் தாக்குதலால் தனது தாய் கொல்லப்பட்டதை அறிந்து கதறி அழுத பாலஸ்தீன குழந்தை

இஸ்ரேலின் குண்டு வீச்சில் தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பறிகொடுத்த பாலஸ்தீன சிறுவன்

அதிர்ச்சியில் உறைந்து போன – இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட – சிறுவன்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தனது மகன்களைக் கண்ட தந்தை

காசாவின் பழைமையான பள்ளிவாசலின் மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் தனது மூன்று பிள்ளைகளை இழந்து கண்ணீர் விட்ட தந்தை


படிக்க: காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!


வடக்கு காசாவின் அல் அலாமி (Al-Alami) பகுதியில் உள்ள குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது

அக்டோபர் 22 இரவில் இஸ்ரேலால் தாக்கி அழிக்கப்பட்ட நுசெய்ரத் (Nuseirat) அகதிகள் முகாம்

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறும் காசாவின் டெயிர் அல்-பாலா (Deir Al-Balah) பகுதி

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசுவதால் வேறு வழியின்றி இடம் பெயர்ந்து தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள்

வடக்கு காசா பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் பணிபுரியும் மருத்துவர்கள்

காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டு மருந்துகள் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் செய்வதாலும், தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாலும் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாக காசா மருத்துவர்கள் கூறுகின்றனர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க