மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அண்மையில் வந்த மழைவெள்ளத்தை பொறுத்தவரை காலநிலை மாற்றம் கணிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையை எட்டிவிட்டதா? இல்லை வானிலை ஆய்வு மையங்களின் தொழில்நுட்பத்தில்தான் பிரச்சினையா?

இரண்டுமே உள்ளது. கணிக்க முடியாத அளவிற்கு வேகமாக மாறுகின்ற காலநிலை மாற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் 113 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. தற்போது, வானிலை ஆய்வு மையம் வைத்திருக்கும் விதிப்படி மிக அதிகனமழை என்பதில் 21 செ.மீ. அளவுதான் வருகிறது. அதற்கு மேல் பொழியும் மழையின் அளவை கணிக்க விதிகளே கிடையாது. எனவே காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள புதிய இயல்பு நிலைக்கேற்ப புதிய அளவீடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதேபோல, அரசுகளால் இந்த மாற்றங்களை கட்டுப்படுத்த முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இயல்பிலேயே இங்குள்ள அரசு மக்கள் விரோதத்தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாவது, சுற்றுசூழலை அழிக்கின்ற நடவடிக்கைகள் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. “பாரிஸ் ஒப்பந்தம்” தொடங்கி காலநிலை மாற்றம் குறித்த எல்லா சர்வதேச மாநாடுகளும் ஒரு சதவிகிதம் கூட தாங்கள் ஒப்புக்கொண்ட முடிவுகளை நடைமுறையில் நிறைவேற்றுவதில்லை. காப் 27 (COP 27), காப் 28 என மாநாடுகள் மட்டும் ஆண்டுந்தோறும் நடந்துக்கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதலையும் ஏகாதிபத்தியங்களுடைய சுரண்டலையும் தடுக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்க்கமுடியாது. இந்த பாதிப்புகள் அதிகரிக்கவே செய்யும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க