மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடக்கம்!
09.06.2024
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே! வணக்கம்.
06.06.2024 அன்று இரவு 9 மணிக்கு திடீரென மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம், வினவு மற்றும் புதிய ஜனநாயகம் ஆகிய முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் வீச்சாக நாங்கள் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ ஒட்டி தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி என்ற வெளியிட்டை தமிழ் நாடு முழுவதும் கொண்டு சென்றோம். மக்களிடத்தில் களத்தில் வேலை செய்த அதே அளவிற்கு இணையத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிரான தளமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக நாங்கள் பங்களிப்பு செய்தோம்.
தமிழ்நாடு முழுவதும் நாங்கள் மேற்கொண்ட போராட்டச் செய்திகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிராக மற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டச் செய்திகளையும் மேற்கண்ட எமது முகநூல் பக்கங்கள் வாயிலாக பரப்புரை செய்தோம். தற்பொழுது முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
2024 தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தேர்தல் முடிவுகளை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு நாள் முழுவதும் வினவு youtube இணையதளம், மக்கள் அதிகாரம் முகநூல் பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாங்கள் நிகழ்ச்சியை நடத்திய அடுத்த நாளிலேயே எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலால் முடக்கப்பட்டு இருக்கின்றது. எமது முகநூல் பக்கங்களை மீட்டெடுக்கும் அதே வேளையில் அவற்றின் பெயர்களை தற்போதைக்கு மாற்ற இயலாது என்றும் அதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்று முகநூல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக செயல்படுவோரின் முகநூல் பக்கங்களையும் இணையதளங்களையும் முடக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் இலக்காக இருக்கிறது. அதன்படியே எமது முகநூல் பக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
இதற்காகவெல்லாம் இந்த நாட்டையே பேரழிவில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எமது போராட்டக் களங்கள் ஒருபோதும் நிற்க போவதில்லை.
பாசிச பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்படுவோரை முடக்கும் இந்த செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முன்னைக் காட்டிலும் இன்னும் வேகமாக அனைத்து வகைகளிலும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி- அதானி பாசிசத்துக்கு எதிராக களமாடுவோம் !
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube