ன்முறை

இதுவும் வன்முறை தான்
வன்முறையாக ஒரு போதும் பார்க்கப்படுவதில்லை

அது உன் விருப்பம் என்று திணிக்கப்படுகிறது

சேரியில் வீடிருந்தால்
பிள்ளைக்கு கல்யாணம் ஆவதில்லை

கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வீட்டை மாற்ற வேண்டும்
கல்யாணம் கூட எளிதில் முடிந்து விடும்
ஆனால் வீடு கிடைப்பது?
அதுவும் சேரியில் இருந்து வந்தவர்களுக்கு
குதிரைக்கொம்பு

சென்னையில் எந்த பகுதியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது மாடியில் இருந்து கேட்பார்கள்

சேரியாக இருந்தால் வீடு இல்லை என்பார்கள்

ஊர் பேரை மாற்றிச் சொன்னாலும்
மூஞ்சியைப் பார்த்து
ஐந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு பத்தாயிரம் ரூபாய் என்பார்கள்

மற்ற சாதியினரை விட தாழ்த்தப்பட்டவர் என்றால் வாடகை அதிகம்
ஆயிரம் நிபந்தனைகள்

மாட்டுக்கறி சமைக்க கூடாது
வெளியே வாங்கி வந்து தின்னவும் கூடாது

எப்படியும் இவர்கள் மாட்டுக் கறி தின்று விடுவார்கள்
என்பதால் கறியே சமைக்க கூடாது

யாரையும்  அழைத்து வந்து மாட்டுக்கறியை நாங்கள் வாயில் திணிக்கவில்லை
ஆனாலும் நாங்கள் என்ன தின்ன வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்

என் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று எவன் கழுத்திலும்
கத்தியை வைக்கவும் இல்லை
ஆனாலும் நாங்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் வீடும் நிலமும் அவர்களுக்கு சொந்தமில்லை

இதுவும் சென்னை தான்

சென்னை இன்னொரு முகம்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க