பொம்மி
‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!
பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!
பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!
இந்நடவடிக்கை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சுரண்டலையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் துணைகொண்டு சட்டரீதியாக மேற்கொள்ளத்தான் வழிவகை செய்யும்.
இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!
பாசிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற வேளையிலும், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலில் தீவிர அரசு ஒடுக்கு முறையை துச்சமாக மதித்து பத்தாவது வாரமாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நமக்கு இதை உணர்த்துகிறது.
துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!
1999-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எர்துவான் அரசு மேற்கொண்டிருக்கும் கைதுகளையும் இவ்வாறே நாம் காண வேண்டியுள்ளது.
பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!
பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல.
கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்கள்.
தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!
திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.
பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!
தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா - கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது துருக்கி!
புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!
உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும்.
“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!
பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.
கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!
நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!
பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.