மக்கள் அதிகாரம்
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. இத்தாக்குதல், மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதன் வெளிப்பாடாகும்.
நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு
ஆதிக்கச் சாதி தலைவர்களுடனும் சங்கங்களுடனும் கைகோர்த்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவா கும்பல் சாதி வெறியை இம்மண்ணில் தூண்டி விடுகிறது. களத்தில் இந்த சாதி வெறியை நிகழ்த்துவதற்கு கஞ்சா, மது போதைகள் உந்துதலாக இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
இந்த தீர்ப்பு என்பது மக்களின் உறுதியான, ஒற்றுமையான போராட்டத்தின் விளைவாகவே கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி பூங்காக்கள், மைதானங்கள், அரங்கங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசு!
மாநகராட்சியில் உள்ள 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் 55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!
மக்களின் பயண நெருக்கடியைத் தீர்ப்பதற்கு போதுமான அளவில் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் இல்லை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதற்கு வக்கற்ற தமிழ்நாடு அரசு, எதையோ பேசி தான் செய்யும் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு கேட்கிறது.
தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் ஆவாரம்பாளையம் பகுதி மக்கள்!
தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசுத்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகச் செயல்படும் போலீசுத் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும் விருதாச்சலம் போலீசின் செயல்பாடும் | உண்மை அறியும் குழு அறிக்கை
தூய்மைப்பணியாளரான தாய், புற்று நோய் பாதிக்கப்பட்ட தந்தை, பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரை கடந்த ஐந்து மாதங்களாக விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அலைக்கழித்து மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!
சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.
லெபனான் மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!
பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது.
லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்
தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்! பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!
லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.
காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி
காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.